இலங்கை கடற்படை கைது செய்துள்ள 6 மீனவர்களை விடுதலை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக மோடிக்கு ஜெயலலிதா எழுதிய கடிதத்தில், இலங்கை சிறையில் இருந்து 104 மீனவர்கள் விடுவிக்கப்பட்டு தாயகம் திரும்ப உள்ளனர். இந்நிலையில் கடந்த 17, 19 ஆகிய தேதிகளில் மீன்பிடிக்ச் சென்ற 6 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை அளித்துள்ளது. இலங்கை கைது செய்துள்ள 6 மீனவர்களையும் இலங்கை வசம் உள்ள 68 படகுகளையும் வெளியுறவுத் துறை மூலம் மீட்க உரிய நடவடிக்கை வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment