Saturday 22 April 2017

கரூர் பரணிபார்க் பள்ளியின் 16 வது ஆண்டுவிழா



பரணிபார்க் பள்ளி 2001 ம் ஆண்டில் தொடங்கி 16 வது ஆண்டு நடைபெற்று வருகிறது. இன்று 22.04.2017 பரணிபார்க் பள்ளியில் 16 வது ஆண்டு விழா, சர்வதேச, தேசிய, மாநில சாதனைகள் புரிந்த பள்ளி மாணவர்களுக்கு 'தங்க நட்சத்திர விருது வழங்கும் பாராட்டு விழா.,  மாணவர்களின் இன்னிசை ஆர்க்கெஸ்ட்ரா மற்றும் பழம்பெரும் பாராம்பரியத்தைக் கொண்டாடும்  கலைவிழா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இவ்விழாவிற்கு பரணிபார்க் கல்வி நிறுவனங்களின் தலைவர் எம்.குமாரசாமி தலைமை  தாங்கினார். பரணிபார்க் கல்வி குழும தாளாளர் S.மோகனரெங்கன், செயலர் பத்மாவதிமோகனரெங்கன் முன்னிலை வகித்தனர். மத்திய சுங்கம், கலால் மற்றும் சேவை  வரிகள் தீர்வாணைய கூடுதல் அமர்வு - சென்னை மண்டலம் உறுப்பினர்   திரு.C.ராஜேந்திரன் I.R.S அவர்கள் ஆண்டுவிழாவை துவக்கி வைத்து வெற்றிக்கு ஏழு குறள்கள் என்ற தலைப்பில் திருக்குறள் சிறப்புரையாற்றினார். மேலும் பரணிபார்க் சர்வதேச, தேசிய சாதனையாளர்களுக்கு தங்க நட்சத்திர விருது வழங்கிப் பாராட்டினார்.

இவ்விழாவில் பரணிபார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பரணி வித்யாலயா சி.பி.எஸ்.இ பள்ளி, எம்.குமாரசாமி கல்வியியல் கல்லூரி மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

விழா ஏற்பாடுகளை பரணிபார்க் கல்வி குழும பரணிபார்க் கல்வி குழும தாளாளர் S.மோகனரெங்கன் தலைமையில், நிர்வாக அலுவலர் M.சுரேஷ், முதல்வர் K.சேகர், துணை முதல்வர்கள் K.மகாலட்சுமி, K.கெளசல்யா, G.செளமியா, P.ரேணுகா தேவி மற்றும் இருபால் ஆசிரியர்கள் ஆகியோர செய்திருந்தனர்.




புகைப்படம்: பரணிபார்க் சர்வதேச, தேசிய சாதனையாளர்களுக்கு தங்கநட்சத்திர விருது வழங்கி மத்திய சுங்கம், கலால் மற்றும் சேவை  வரிகள் தீர்வாணைய கூடுதல் அமர்வு - சென்னை மண்டலம் உறுப்பினர்   திரு.C.ராஜேந்திரன் I.R.S அவர்கள் பாராட்டுகிறார். அருகில் பரணிபார்க் கல்வி குழும தாளாளர் S.மோகனரெங்கன், பரணிபார்க் கல்வி குழும தாளாளர் S.மோகனரெங்கன்.