Monday 28 November 2016

வாட்ஸ் அப் வாத்தியாரை கைது செய்ய கோரியும், துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள கோரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியிடம் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தினர் புகார்





கரூரில் உள்ள மாவட்டக் கல்வி அலுவலரை பற்றியும், அரசுத்தேர்வுகள் இயக்கத்தை பற்றியும் கேவலமாக பேசி அவதூறு பரப்பி வரும் ஆசிரியரை கைது செய்யவும், துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய நிர்வாகிகள் புகார் அளித்தனர்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கூடுதல் கட்டிடத்தில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் சார்பில் அதன் மாவட்ட தலைவர் பாரதிதாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் முதன்மை கல்வி அலுவலரிடம் மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா 14 வகை நலத்திட்டங்களை மாணவர்களுக்கு சிறப்பாக விநியோகம் செய்து அரசுக்கு நற்பெயரை ஈட்டி வரும் வேலையில், கரூர் மாவட்ட கல்வித்துறை அலுவலகப் பணியாளர்களையும், மற்ற அலுவலர்களையும், மாவட்ட கல்வி அலுவலரை பற்றியும் வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் மூலம் பரப்பி வருவதோடு, அரசுத்தேர்வுகள் பற்றியும் அவதூறு பரப்பி அவமானபடுத்தி வரும் ஆசிரியர் ஜெகதீசன் என்பவரை சைபர் க்ரைம் நடவடிக்கை எடுப்பதோடு, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமசாமியிடம் புகார் கொடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதோடு, மாவட்ட கல்வி அலுவலர்களையும், அதிகாரியையும் பற்றி கேவலமாக பேசியதோடு, மன உளைச்சல் ஆளாவதால் மனவேதனையில் ஈடுபடுவதாகவும் முதன்மை கல்வி அலுவலரிடம் வாக்குவாதம் நீடித்தது. பின்னர் சுமார் 2 மணி நேரம் நீடித்த இப்பிரச்சினையில் துறை ரீதியான தக்க நடவடிக்கை எடுப்பதோடு, முதல்வர் பெயருக்கு களங்கம் ஏற்படாத வகையிலும், கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்களின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தாத வகையில் தக்க நடவடிக்கை எடுப்பதாக கூறி அனுப்பி வைத்தார். இந்த சம்பவத்தால் கல்வித்துறையினரிடையே சுமார் 3 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் மாவட்டத்தலைவர் சு.பாரதிதாசன் தலைமையில் நடைபெற்ற இந்த புகார் கொடுத்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் நா.அன்பழகன், மாவட்ட பொருளாளர் இரா.விக்னேஷ், துணைத்தலைவர்கள் இரா.பால்ராஜ், இரா.குமரேஷன், கோ.அமுதவேல், வ.ஸ்டாலின், கி.சாந்தி, அமைப்பு செயலாளர் ப.கடம்பலிங்கம், பிரச்சாரச் செயலாளர் க.ராமசாமி, இளைஞரணிச் செயலாளர், கே.ராதிகா, மகளிர் அணி செயலாளர் மா.சாரதா, மத்திய செயற்குழு உறுப்பினர் து.ஸ்டீபன், தணிக்கையாளர் பெ.சிவக்குமார், இணை செயலாளர்கள் பி.பி.காமராஜ், சா.கருப்பசாமி, சி.தர்மலிங்கம், க.சிவராஜ், ரா.கலியப்பெருமாள் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment