Tuesday 21 March 2017

மாநில ஜீடோ போட்டியில் கரூர் பரணிபார்க் பள்ளி மாணவர்கள் வெற்றி

பள்ளிக் கல்வித்துறையின் மூலம் 2016-2017ம் கல்வியாண்டிற்கான மாநில அளவிலான ஜீடோ போட்டி U14, U-17, U-19 ஆகிய மாணவ, மாணவியர் பிரிவில் கடந்த 21 ம் தேதி மற்றும் 23 ம் தேதி ஆகிய தேதிகளில் நாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில் பெரம்பலூர் மண்டலத்தின் சார்பாக கலந்து கொண்ட பரணிபார்க் பள்ளி மாணவி R.செளமியா U-14- 54 கிலோ எடை பிரிவில் தங்கப்பதக்கமும், இதே பிரிவில் மாணவர் S.ஜம்புகேஸ்வரன் 40 கிலோ எடை பிரிவில் வெள்ளிப்பதக்கமும் பெற்றார். U-17 -56 கிலோ எடை பிரிவில் மாணவி R.கெளசிகா வெண்கலப்பதக்கம் பெற்றார்.
மாநில அளவிலான ஜீடோ போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியில் பாராட்டுவிழா நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளியின் தாளாளர் S.மோகனரெங்கன், பள்ளியின் செயலாளர் பத்மாவதி மோகனரெங்கன், பள்ளியின் முதன்மை முதல்வர் முனைவர் C.ராமசுப்பிரமணியன், பள்ளியின் முதல்வர் K.சேகர், பள்ளியின் நிர்வாக அலுவலர் M.சுரேஷ், இருபால் ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோர் தேசிய போட்டியில் வெற்றிபெற வாழ்த்தினர்.



புகைப்படம்: மாநில அளவிலான ஜீடோ போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள், பள்ளியின் தாளாளர் S.மோகனரெங்கன், பள்ளியின் முதன்மை முதல்வர் முனைவர் C.ராமசுப்பிரமணியன்

No comments:

Post a Comment