Thursday 16 June 2016

மாணவர்கள் மார்க்குக்கு என்றில்லாமல் மதிப்புற திருக்குறள் படிக்க வேண்டும் கரூர் திருக்குறள் நூல் வெளியீட்டு விழாவில் செளமா பேச்சு !





கரூர் திருக்குறள் பேரவை 30 ஆம் ஆண்டு சிறப்பு நிகழ்வாக ”வள்ளுவத்தில் பதினாறு” நூல் வெளியீடு மற்றும் பல்துறை வித்தகர்களுக்குப் பாராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோயில் முன்புறம் அமைந்துள்ள கரூர் நகரத்தார் சங்க கட்டிடத்தில் நடைபெற்ற இவ்விழாவிற்கு வா.செ.குழந்தைசாமி அறக்கட்டளை அறங்காவலரும், கரூர் தொழிலதிபருமான பி.டி.கோச் தங்கராசு தலைமை தாங்கினார். திருக்குறள் பேரவை நிறுவனரும், செயலாளருமான மேலை.பழநியப்பன் நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றார். மேலும் இந்நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக வள்ளுவத்தில் பதினாறு என்ற நூலை புரவலர் கு.ராமலிங்கம் வெளியிட புரவலர் பழ.ஈஸ்வரமூர்த்தி பெற்றுக் கொண்டார். தனலெட்சுமி வங்கி மேலாளர் மு.மு.அஷ்ரப் அலி வாழ்த்துரையாற்றினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திருச்சி மாவட்டம், மணப்பாறை செந்தமிழ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் செளமா இராஜரெத்தினம், இவ்விழாவில் திருக்குறள் வாழ்வியல் வழிகாட்டி நூல் என்றார். மேலும் திருக்குறள் ஒழுக்கத்தையும் பண்பையும் செதுக்கும் நூல் என்றும் பள்ளியில் மாணவர்கள் திருக்குறளை மார்க் பெற படிப்பது என்றும், பயனற்றது என்றும், நினைத்து கொண்டிருந்தார்கள். உலகப் பொதுமறையாம் திருக்குறள் நூலை மதிப்புற கற்று, திருக்குறளை படித்து பின்பற்றுவதே சிறப்பு என்றார். வள்ளுவத்தில் பதினாறு வளரும், எல்லா தலைமுறையை சென்றடையும், மேலும் வள்ளுவம் தந்த திருக்குறளையும், அதன் நோக்கத்தையும் கூடியதுடன் இந்த நூல் வெளியிடப்பட்டிருப்பது பாராட்டிற்கு உரியது என்றார், விழாவில் படைப்பாளர்கள் திருக்குறள் திருக்குறள் பரப்புநர்கள், இலக்கிய நூலகச்சேவையாளர்கள், இசைக்கலைஞர்கள், பள்ளித்தாளாளர்கள், முதல்வர்கள் தமிழில் மாநில அளவில் முதலிடம் பிடித்த கரூர் பரணிபார்க் பள்ளி மாணவர் எஸ்.விக்னேஸ்வரன் உள்ளிட்டோர் பாராட்டுப்பெற்றனர். இந்நிகழ்ச்சியில் கரூர் கவிஞர் கன்னல், பாவலர் எழில்வாணன், அருணா பொன்னுசாமி, முன்னாள் எம்.எல்.ஏ மலையப்பசாமி, சூர்யா வே.கதிரவன், அருண் கருப்புசாமி, அறிவுடை நம்பி, ஜெகன் நாத ஒதுவார், மெய்யப்பன், குறளகன், புலவர் பார்த்தசாரதி, கவிஞர் நன்செய்ப் புகழூர் அழகரசன், இறையரசன், எஸ்.வி.கந்தசாமி, பாலமுருகன், பாலகிருஷ்ணன், இராமகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். மேலும் இந்நிகழ்ச்சியில் கரூர் பரணி பார்க் பள்ளியின் முதன்மை முதல்வர் முனைவர் ராமசுப்பிரமணியன் கொளரவிக்கப்பட்டார்.
இறுதியில் க.ப.பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment