Saturday 13 February 2016

இன்று வரை அம்மாவிற்காக பாடுபடும் நாங்கள், அம்மா ஆட்சியில் இல்லாத போது கூட முதல்வர் மற்றும் பிரதமர் ஆக வேண்டி பிரார்த்தனை செய்தோம் – கரூரில் அகில இந்திய மக்கள் கட்சி நிறுவனத்தலைவர் காமராஜ் பேட்டி





வருகின்ற  2016  சட்டமன்ற  பொதுத்  தேர்தலில்  எந்த  அரசியல்  கட்சிகள் அருந்ததியர்  மக்களுக்கு அதிக சட்டமன்ற வேட்பாளர்களை கொடுக்கின்றதோ அந்த கட்சிக்கு அகில  இந்திய  மக்கள்  கட்சி  ஆதரவு  தெரிவிக்கும்  -  கரூரில் அக்கட்சியின் நிறுவனத்  தலைவர்  பேட்டி

 அகில  இந்திய  மக்கள்  கட்சி  ( அனைத்து அருந்ததியர் மக்கள் கூட்டமைப்புநிறுவனத் தலைவர்  காமராஜ், தலைமையில் கரூரில் உள்ள தனியார் விடுதி கூட்டரங்கில்  பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்அப்போது  செய்தியாளர்களிடம்  பேசிய  அவர்திமுக  ஆட்சியில்  அருந்ததியர் மக்களுக்கு  3  சதவீதம்  இட  ஒதுக்கீடு  வழங்கப்பட்டதுதமிழகத்தின் தற்போதைய  முதல்வர் கடந்த  சட்டமன்ற  தேர்தலின்  போது ஆட்சிக்கு வந்தால்  சரியான  இட  ஒதுக்கீடு  வழங்குவதாக உறுதி  அளித்திருந்தார். ஆனால்  தற்போது  வரை  எதுவும்  செய்து  தரப்படவில்லை  என்றும் அருந்ததியினரின்  கோரிக்கையை  ஏற்று குதிரையுடன் கூடிய  ஒண்டிவீரரின்  சிலையும்,  மணி மண்டபத்தை அரசு  நிறுவி  வருகிறது, அதற்கு நன்றி தெரிவித்த கட்சியினர் மேலும் அந்த மணிமண்டபத்தை  சட்டமன்ற  தேர்தலுக்கு  முன்பாக  திறக்க  வேண்டும் என்றார் அருந்ததியர்  மக்கள் அதிகம்  வசிக்கின்ற  பகுதியில்  வேறு  தாழ்த்தப்பட்ட  சமுதாயத்தை  சார்ந்த  வேட்பாளராக  அறிவிப்பது  அருந்ததியினரை  அவமானப்படுத்துவது போன்றுள்ளது  என்றார்.   வருகின்ற 2016 சட்டமன்ற பொதுத் தேர்தலில் எந்த அரசியல் கட்சிகள் அருந்ததியர்  மக்களுக்கு  அதிக  சட்டமன்ற  வேட்பாளர்களை கொடுக்கின்றதோ  அந்த  கட்சிக்கு  அகில  இந்திய  மக்கள்  கட்சி  ஆதரவு  தொpவிக்கும்  என்றார்மேலும் வருகின்ற  21.02.2016  அன்று  சென்னையில் அக்கட்சியின்   சார்பில்   மாநில  பொதுக்குழு மற்றும்   செயற்குழுக்  கூட்டம் நடைபெற  இருப்பதாகவும்அதில்  திமுகஅதிமுகபாஜக போன்ற  கட்சிகளின்  பிரதிநிதிகளை சிறப்பு அழைப்பாளராக அழைக்க உள்ளதாக தெரிவித்தார். மேலும் பேசிய கட்சியின் நிறுவனத்தலைவர் பி.எம்.எம்.காமராஜ் கடந்த 2011 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் அதே வருடம் 63 வது பிறந்த நாள் அன்று அப்போது ஆட்சியில் இல்லாத போதே ஆட்சிக்கு வரவேண்டும் என்றும், அம்மா நீடுடி வாழ வேண்டுமென்று கரூர் மாரியம்மன் கோயிலில் அங்கப்பிரதட்சனை செய்த நான் எனது நிகழ்ச்சியை அம்மாவின் கழக இதழான டாக்டர் நமது எம்.ஜி.ஆரில் வரவிடாமல் செய்தவர். தற்போதைய மாஜியும், அப்போதைய போக்குவரத்து துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி என்றார். மேலும் அப்போது ஆரம்பித்த அங்கப்பிரதட்சனம் கரூரிலிருந்து சென்னை வரை ஆங்காங்கே உள்ள சிறப்பு இந்து, முஸ்லீம், கிறிஸ்துவ ஆலயங்களில் சிறப்பு பூஜை, பிரார்த்தனை, தொழுகை, அன்னதான நிகழ்ச்சிகளையும் எங்கள் கட்சி ஏற்கனவே அதாவது அம்மா ஆட்சியில் இல்லாத போதே செய்தோம், தற்போதும் அம்மாவிற்காக பல நல்ல திட்டங்களை பொதுமக்களிடம் சொல்லி வருவதாக கூறிய நிறுவனத்தலைவர் பி.எம்.எம்.காமராஜ், முதன் முறையாக அம்மா பாரதப்பிரதமராக ஆக வேண்டி முதல் முறையாக சொன்னவரும் நான் தான் என்றார். அப்படி பட்ட அம்மா நலனில் அக்கறை கொண்ட எங்கள் கட்சி இன்றும் அ.தி.மு.க கூட்டணியில் தான் நீடிக்கிறது என்றும், எங்களது வளர்ச்சியை முறியடிக்கும் வகையில் கடந்த அ.தி.மு.க அதாவது மாஜி நிர்வாகிகள் செயல்பட்டதாகவும் குற்றம் சாட்டினார். எங்களது கோரிக்கைகளுக்கு அம்மா செவி சாய்க்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தார். இந்நிகழ்ச்சியின் போது கரூர் மாவட்ட தலைவர் மனோகரன், துணை தலைவர் ராஜலிங்கம் என்கிற ராஜா, கடவூர் ஒன்றிய செயலாளர் மாயவன், தாந்தோன்றி மலை ஒன்றிய தலைவர் பழனிச்சாமி, தாந்தோன்றி மலை ஒன்றிய இளைஞரணி தலைவர் வெள்ளைச்சாமி மற்றும் கரூர் மாவட்ட நிர்வாகிகள் பலர் இருந்தனர்.

No comments:

Post a Comment