Saturday 6 February 2016

தமிழக முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு கரூர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் மாவட்ட அளவிலான கபாடி போட்டி – மாவட்ட செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது




கரூர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்காக விளையாட்டு போட்டிகள் கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமை அன்று நடத்தப்பட்டது. பின்னர் சனிக்கிழமை (06-02-16) இன்று கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் பொதுமக்களுக்கான கரூர் மாவட்ட அளவிலான கபாடி போட்டி நடைபெற்றது. கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இப்போட்டியை மக்களவை துணை சபாநாயகர் டாக்டர் மு.தம்பித்துரை துவக்கி வைத்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட அம்மா பேரவை செயலாளரும், கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ வுமான எஸ்.காமராஜ்., கரூர் நகர செயலாளர் வை.நெடுஞ்செழியன்., முன்னாள் மாநில இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் செந்தில்நாதன், கரூர் மாவட்ட பொருளாளர் எம்.எஸ்.கண்ணதாசன், சரவணா ஸ்டோர்ஸ் சரவணன், ஆயில் இரமேஷ்  உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர். மொத்தம் 40 அணிகள் கலந்து கொண்ட இந்த கபடி போட்டி சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்கள் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment