Sunday 31 January 2016

தாய்மார்களே ! பெரியோர்களே !!! அம்மா சாதனைகள் குறித்து பிரச்சாரம் கரூரில் சூடுபிடித்தது தேர்தல் களம் முதன்முறையாக கரூரில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கிய அ.தி.மு.க வினர்கள்



தாய்மார்களே ! பெரியோர்களே !!! அம்மா சாதனைகள் குறித்து பிரச்சாரம் கரூரில் சூடுபிடித்தது தேர்தல் களம் முதன்முறையாக கரூரில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கிய அ.தி.மு.க வினர்கள் மத்தியில் பெரும் உற்சாகம் தென்பட்டுள்ளது.

தமிழகத்தில் வரும்  சட்டமன்ற தேர்தல் வருவதையடுத்து கூட்டணி பேரங்கள் ஒரு புறம் இருக்க, நாங்கள் தான் முதல்வர் வேட்பாளர் என்று பா.ம.க வினரும், கூட்டணி என்றும் மக்கள் நல கூட்டணியாக வை.கோ வை வைத்தும், நாங்கள் இல்லாமல் எந்த கட்சியும் ஜெயிக்காது என பாரதீய ஜனதா கட்சியினரும் ஆங்காங்கே தம்பட்டம் அடித்து வரும் நிலையில், அ.தி.மு.க வினரின் அதே பாணியில், தமிழக முதல்வரும், அ.தி.மு.க பொதுச்செயலாளருமான செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் உத்திரவிற்கிணங்க நல்லாட்சி மீண்டும் தொடர்ந்திட அன்பு – அமைதி – வளர்ச்சி தமிழகத்தில் தொடர்ந்து நிலைத்திட எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்பீர் இரட்டை இலைக்கு என்ற வாசகங்கள் கொண்ட அ.தி.மு.க சாதனை பிரச்சாரத்தை துவக்கினார்கள். கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இந்த துண்டு பிரச்சூரங்கள் வழங்கும் நிகழ்ச்சி கரூர் மாவட்டத்தில் கரூர் பேருந்து நிலையம், மண்மங்கலம், கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு உள்பட்ட பல பகுதிகளில் துண்டு பிரச்சூரங்கள் நிகழ்ச்சி சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. மக்களவை துணை சபாநாயகரும், அ.தி.மு.க கொள்கை பரப்பு செயலாளருமான டாக்டர் மு.தம்பித்துரை கரூரில் துவக்கி வைத்ததோடு, அவரும் மாவட்ட செயலாளர் விஜயபாஸ்கர், கரூர் நகர செயலாளர் வை.நெடுஞ்செழியன், கரூர் மாவட்ட பொருளாளர் எம்.எஸ்.கண்ணதாசன் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகளும், பிற அணி நிர்வாகிகள் ஏராளாமானோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். கரூர் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்திலும் அ.தி.மு.க நெ 1 தான் என்பதை நிருபித்து காட்டியுள்ளதாக மற்ற கட்சியினர் மட்டுமில்லாமல் அ.தி.மு.க வினர் பெருமை பட்டு வருகின்றனர்

No comments:

Post a Comment