Wednesday 25 May 2016

12 ம் வகுப்பு தேர்வில் சாதனையை தொடர்ந்து 10 வகுப்பு தேர்விலும் கரூர் பரணிபார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாநில அளவில் சாதனை




கரூர் பரணிபார்க் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் சாதனை படைத்துள்ளனர். மாணவன் B.கிஷோர் மற்றும் மாணவி S.கீர்த்தனா ஆகியோர் 497 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாமிடமும், மாவட்ட இரண்டாமிடமும், கரூர் பரணி பார்க் பள்ளி அளவில் முதலிடமும் பெற்று சாதனை படைத்துள்ளனர். மாணவி S.கிருபாலினி, T.ராஜ்பிரியா மற்றும் மாணவன் M.கெளசிக் ஆகியோர் 496 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் மூன்றாமிடமும், பள்ளி அளவில் இரண்டாமிடமும் பெற்றுள்ளனர். மாணவி R.அபர்ணா, மாணவன் M.P.தர்ஷன் மற்றும் S.ராகுல் ஆகியோர் 495 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் மூன்றாமிடம் பெற்றுள்ளனர்.  மேலும் இதே பள்ளியில் மொத்த மதிப்பெண்களில் 500 க்கு 495 மதிப்பெண்களுக்கு மேல் 8 மாணவர்களும், 500 க்கு 490 மதிப்பெண்களுக்கு மேல் 21 மாணவர்களும் பெற்றுள்ளனர். மேலும் கணிதத்தில் 26 மாணவர்களும், அறிவியலில் 16 மாணவர்களும், சமூக அறிவியலில் 36 மாணவர்களும் 100/100 மதிப்பெண் பெற்றுள்ளனர். தேர்வெழுதிய அனைத்து மாணவர்களும் 100  சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில, மாவட்ட சாதனை புரிந்த மாணவர்களுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளியின் தாளாளர் S.மோகனரெங்கன், செயலர் பத்மாவதிமோகனரெங்கன், முதன்மை முதல்வர் முனைவர் C.ராமசுப்பிரமணியன், நிர்வாக அலுவலர் M.சுரேஷ் ஆகியோர் சாதனை படைத்த மாணவர்கள் அவர்களுக்கு உறுதுணையாக இருந்த முதல்வர் K.சேகர், துணை முதல்வர்  G.நவீன்குமார் மற்றும் ஆசிரியர்களை பாராட்டி வாழ்த்தினர்.

No comments:

Post a Comment