Wednesday 11 May 2016

நான் நீ என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது ! நாம் என்று சொன்னால் தான் உதடுகள் ஒட்டும் கருணாநிதி சொல்கிறார் ! அவரையே நான் கேட்கிறேன் ! அம்மா என்று சொன்னால் அவர் உதடு கூட ஒட்டும் கரூரில் நடிகர் அருள்மணி பேட்டி









 நான் நீ என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது ! நாம் என்று சொன்னால் தான் உதடுகள் ஒட்டும்  கருணாநிதி சொல்கிறார் ! அவரையே நான் கேட்கிறேன் ! அம்மா என்று சொன்னால் அவர் உதடு கூட ஒட்டும் கரூரில் நடிகர் அருள்மணி பேட்டி
தேர்தலுக்கு முன் தி.மு.க வினர் கபல நாடகம் ஆட சதி திட்டம் தீட்டி வருகின்றனர் – கரூரில் நடிகர் அருள்மணி பிரத்யோக பேட்டி
கரூரில் திரைப்பட நடிகர் அருள்மணி கரூர் அ.தி.மு.க வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை ஆதரித்து இரு தினங்களாக பிரச்சாரம் மேற்கொண்ட அவரின் பிரத்யோக பேட்டியாவது.,
அவர் கூறியதாவது., தி.மு.க தலைவர் கருணாநிதி மிகப்பெரிய நாடகம் நடத்த உள்ளார். என்னவென்றால் தேர்தலுக்கு மூன்று நாட்கள் முன்னர், பொதுக்கூட்ட மேடையில் பிரச்சாரம் செய்கிற போது., ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளே என்று பேசிக் கொண்டு இருக்கும் போது, திடீரென்று மயக்கம் அடைந்து மூச்சு வாங்கிய நிலையில் ஆம்புலன்ஸ் சில் ஏறி  சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவ்வப்போது தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களில் கருணாநிதி உடல் நிலையை குறித்து செய்திகள் வெளியாகி, ரொம்ப சீரியஸா ? இருக்கிறார். ரொம்ப மோசமான நிலையில் இருக்கிறார் ?  இதையெல்லாம் பார்க்கும் மக்கள் ஐயோ ! முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு அப்படி ஆயிற்றே ! என்று அனுதாப அலையை ஏற்படுத்தி, அனுதாப வாக்குகளை பெற திட்டமுட்டுள்ளனர். இதையெல்லாம் சமூக வலைதளங்களில் வருகிறது. ஆனால் பொதுமக்கள்,  தமிழக மக்கள் நம்ப மாட்டுகிறார்கள். ஏன் என்றால் இவர்களுடைய கதை மக்களுக்கு தெரியும், இவர்கள் என்ன சொல்லி வாக்குகள் கேட்பார்கள். கொள்ளையடித்துள்ளதை தான் சொல்வார்கள். நாங்கள் ரூ 1 லட்சத்து 26 ஆயிரம் கோடி 2 ஜி யில் கொள்ளையடித்துள்ளோம் என்று சொல்வார்கள். இது தான் அவர்களுடைய லிஸ்ட், எல்லா கபட, கள்ள நாடகங்கள் பற்றி மக்களுக்கு தெரியும் தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள். மேலும் கலைஞர் அப்பபோ ! பேசுவார், நான் என்றால் உதடுகள் ஒட்டாது, நீ என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது, நான், நீ என்று சொன்னால் உதடுகள் கூட ஒட்டாது என்றும், நாம் என்று சொன்னால் தான் உதடுகள் ஒட்டும் என்று அரசு பேருந்துகளில் அப்போதைய மைனாரிட்டி தி.மு.க வினர் ஆட்சியில் இருந்த போது அரசுப்பேருந்துகளிலிலும், அரசு நிகழ்ச்சிகளிலும், சொல்லி வந்தார்.  அம்மா என்று சொல்லி பார் ! உதடுகள் ஒட்டும் ! ஏனென்றால் அம்மா நல்ல சக்தியாக, தமிழக மக்களை காக்கும் சக்தியாக உள்ளார். மக்களுக்காக நான் ! மக்களால் நான் என்று சொல்லும் ஒரு உன்னத தலைவர் அம்மா புரட்சித்தலைவி ஆவார். நாட்டு மக்களுக்காக பாடுபடும் உண்மை தலைவி தான் அம்மா அவர்கள். இது வரை மக்களுக்காக அள்ளும் பகலும் அயராது பாடுபட்டு வருகிறார். இந்த தேர்தலில் அம்மா அவர்கள் 234 தொகுதிகளிலும் அம்மா ஜெயிப்பது உறுதி, மீண்டும் முதல்வர் ஆவார். அம்மாவை தமிழக மக்கள் நன்கு புரிந்து வைத்துள்ளார்கள் என்றார்.
மேலும் கருணாநிதியை பொறுத்தவரை தன் சொந்த குடும்பத்திலேயே நிதியை வைத்துள்ளார், கருணா”நிதி”, உதய”நிதி”, கலா”நிதி”, தயா”நிதி” என்று பெயரிலையே நிதியை வைத்துள்ளார். அவர் குடும்பத்தில் நிதியை வைத்துள்ளதோடு, பெயரிலும் நிதியை வைத்துள்ள குடும்பம் தான் கருணாநிதி குடும்பம். நிதியை தன் சொந்த குடும்பத்திற்கு இன்று வரை சேர்த்து வருகிறார். ஆனால் அம்மாவிற்கு தமிழக மக்கள் தான் உறவு, தமிழக மக்கள் தான் குடும்பம், கிட்டதட்ட அம்மாவின் சாதனைகளை சொல்ல ஒரு நாள் பத்தாது, தற்போது பெண்களுக்காக ஸ்கூட்டர் 50 விழுக்காடு பணம் கட்டினால் போதும், விலையில்லா மொபைல் போன் என்று யாராவது., மக்களுக்காக கொடுத்திருக்கிறார்களா ? என்றார். எல்லா வகையிலும் தமிழக மக்களுக்கு ஒரு மறுமலர்ச்சி கொடுத்துள்ள அம்மா தமிழக மக்கள் அவரை நன்கு புரிந்து வைத்துள்ளார்கள். அம்மா ஜெயிக்க வேண்டுமென்று எங்களுக்கு இருப்பதை விட வயதானவர்களுக்கும், பொதுமக்களுக்கும், இளைஞர்களுக்கும் தான் அதிகம் இருக்கிறது. ஏனென்றால் அவர்கள் படிக்க வைத்ததோடு, ஓய்வூதியம் என பல நல்ல திட்டங்களை தீட்டியதோடு, விலையில்லா மடிக் கணினி, விலையில்லா நோட்டு, புக்குகள், விலையில்லா ஜாமின்ரி பாக்ஸ், விலையில்லா என்று பல நல்ல திட்டங்களை தீட்டி மாணவ சமுதாயத்தை உயர்த்தியுள்ளார். அம்மா யாரையெல்லாம் அடையாளம் காட்டுகிறாரோ ! அந்த வேட்பாளரை தேர்ந்தெடுப்பதோடு, எதிர்கட்சி வேட்பாளரை டெபாசிட் இழக்க வைக்க பொதுமக்கள் அயராது பாடுபட வேண்டும் என்றார்.
இதில் எந்த ஒரு நட்சித்திர பேச்சாளரும், பேசாதது என்னவென்றால் கருணாநிதி குடும்பத்திற்காக மட்டும் நிதியை சேர்ப்பதில்லை. பெயரிலும், நிதியை சேர்த்துள்ளதையும், மேலும் நான் நீ என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது நாம் என்று சொன்னால் தான் உதடுகள் கூட ஒட்டும் என்று சொன்ன கருணாநிதி தமிழக மக்களை ஏமாற்றுகிறார். அம்மா என்று சொல்லிப்பார். கருணாநிதியின் உதடுகளும் ஒட்டும் என்று சொன்ன நடிகரின் பேச்சு அ.தி.மு.க கட்சியை புத்துணர்ச்சி அடைய செய்துள்ளது. மேலும் இந்த பேட்டியை முடித்து கொண்டு கரூர் ரவுண்டானா, அரசுக்காலனி, வேட்டைக்காரன்புதூர் உள்ளிட்ட பகுதியில் கரூர் அ.தி.மு.க வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு ஆதரவாக வாக்குகள் சேகரித்தார். இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க மாவட்ட அவைத்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், கரூர் நகர செயலாளர் வை.நெடுஞ்செழியன், கரூர் நகர எம்.ஜி.ஆர் மன்ற நிர்வாகி ஆயில் ரமேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் வேட்டைக்காரன் புதூர் பகுதியில் உள்ள நரிக்குறவர் இன மக்களிடம் வாக்குகள் சேகரித்த அவர், அங்குள்ள நரிக்குறவ இன குழந்தைகளை கொஞ்சி மகிழ்ந்தார். இது அனைவரையும் கவர்ந்தது.

No comments:

Post a Comment