Monday 25 April 2016

கொலையும், கொள்ளையும் செய்வதற்கு கூச்சப்படாமல் அதிகார துஸ்பிரயோகம் செய்யும் கொள்ளைக்குடும்பம் தான் கருணாநிதி குடும்பம் – கரூரில் நாஞ்சில் சம்பத் பேச்சு






கரூர் அ.தி.மு.க வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை ஆதரித்து கரூர் வெங்கமேடு, தாந்தோன்றிமலை, கரூர் பேருந்து நிலையம் போன்ற பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட அ.தி.மு.க தலைமைக்கழக பேச்சாளர் நாஞ்சில் சம்பத், திறந்த வேனில் கொளுத்தும் வெயிலையும் பார்க்காமல் வாக்குகள் சேகரித்தார். அப்போது அவர் பொதுமக்களிடம் பேசியதாவது., தமிழகத்தில் கடந்த 1967 ல் செத்துப்போன காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க தலைவர் கருணாநிதி 41 தொகுதிகள் வரும் சட்டமன்ற தேர்தலில் தாரை வார்த்து கொடுத்தது தமிழர்களுக்கு செய்து துரோகம் கருணாநிதி தான், மேலும் 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் தைரியம் முதல்வர் ஜெயலலிதாவிற்கு மட்டுமே உண்டு என்றார். மேலும்  கரூரில் நிற்கும் காங்கிரஸ் வேட்பாளரை டெபாசிட் இழக்க செய்வேன் என்றார். மேலும் கொலையும், கொள்ளையும் செய்வதற்கு கூச்சப்படாமல் அதிகார துஸ்பிரயோகம் செய்யும் கொள்ளைக்குடும்பம் தான் கருணாநிதி குடும்பம் தான் என்று தி.மு.க கட்சி தலைவரை சரமாரியாக கரூரில் நாஞ்சில் சம்பத் பேசியே தாக்கினார். இந்நிகழ்ச்சியில் கரூர் நகர செயலாளர் வை.நெடுஞ்செழியன், கரூர் நகர்மன்ற தலைவர் தமிழ்நாடு செல்வராஜ், கரூர் மாவட்ட அவைத்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment