Tuesday 15 December 2015

வெள்ள நிவாரணத்துக்காக கடந்த ஒரு வாரத்தில் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.111 கோடி குவிந்தது


முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.111 கோடி குவிந்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக  முதல்அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு, தலைமைச் செயலகத்தில் பலர் முதல்அமைச்சர் ஜெயலலிதாவிடம் 15ந் தேதி (நேற்று) நிதியுதவி வழங்கினார்கள்.மக்கள் குரல் மற்றும் டிரினிட்டி மிரர் நாளிதழின் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் ஆர்.முத்து குமார், அந்த நாளிதழ்களின் சார்பில் தலா ரூ.3 லட்சம் ரூபாய் என மொத்தம் ரூ.6 லட்சம்;

என்.ஏ.சி. ஜுவல்லர்சின் மேலாண்மை இயக்குனர் அனந்தபத்மநாபன் ரூ.25 லட்சம்; கரூர் வைஸ்யா வங்கியின் மேலாண்மை இயக்குனர் கே.வெங்கட்ராமன் அந்த வங்கியின் சார்பில் ரூ.2 கோடி, மற்றும் வங்கி பணியாளர்களின் ஒருநாள் சம்பளமான ஒரு கோடி ரூபாய் என மொத்தம் ரூ.3 கோடி;

செட்டிநாடு சிமெண்ட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் எம்.ஏ.எம்.ஆர்.முத்தையா (அய்யப்பன்) ரூ.3 கோடி; கோயம்புத்தூர், லஷ்மி மெஷின் ஒர்க்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் சஞ்சய் ஜெயவர்த்தனவேலு ரூ.2 கோடி;

சக்தி மசாலா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் பி.சி.துரைசாமி மற்றும் இயக்குனர் டி.சாந்தி ஆகியோர் ஒரு கோடி ரூபாய்; ஜி.ஆர்.டி. ஜு வல்லர்ஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர்கள்  ஜி.ஆர். அனந்தபத்மநாபன் (ஆனந்த்) மற்றும் ஜி.ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஒரு கோடி ரூபாய்;

நிசான் மோட்டார் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் நிசான் இந்தியா ஆபரேஷன்ஸ் தலைவர் கியோம் சிகார் ஒரு கோடி ரூபாய்; கோயம்புத்தூர், பி.எஸ்.கோவிந்தசாமி நாயுடு அண்டு சன்ஸ் தொண்டு நிறுவனத்தின் நிர்வாக அறங்காவலர் எல்.கோபாலகிருஷ்ணன் ஒரு கோடி ரூபாய் வழங்கியுள்ளனர்.

தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக்காக மொத்தம் ரூ.12 கோடியே 31 லட்சம் ரூபாய் முதல்அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 15ந் தேதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக்காக முதல்அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை வழங்கப்பட்ட தொகை 111 கோடியே 8 லட்சத்து 22 ஆயிரத்து 745 ரூபாயாகும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 8ந் தேதியில் இருந்து முதல்அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பலரும் நிதி வழங்குவது, கடந்த 8ந் தேதி தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment