Wednesday 16 December 2015

தமிழக அளவில் 2016 சட்டமன்ற தேர்தலில் முதலில் முந்திய விவசாயிகள் ! விவசாயிகளின் கோரிக்கையை மத்திய, மாநில அரசுகள் ஏற்காததை அடுத்து அவர்களே போட்டியிட முடிவு – கரூர் அருகே தேர்தல் பிரச்சாரத்தை விவசாயிகள் துவக்கினார்



தமிழக அளவில் வரும் 2016 வருடம் கூட பிறக்காத நிலையில் 2016 சட்டமன்ற தேர்தல், அறிவிக்கப்படாத நிலையில் தங்களுடைய எந்த கோரிக்கையும், மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து புறக்கணித்து வந்த நிலையில் விவசாயிகளே தன்னந்தனியாகவும், விவசாயிகள் விழிப்புணர்வு அமைப்பு சார்பில் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரத்தை துவக்கினார்கள். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தென்னிலை, க.பரமத்தி, லட்சுமி புரம் உள்ளிட்ட பகுதிகளில் முதன் முதலாக தேர்தல் பிரச்சாரத்தை எளிய முறையில் எந்த வித கட்சி கொடி இல்லாமல் துண்டு பிரச்சூரங்களை மட்டுமே படித்த இளைஞர்களிடம், பொதுமக்களிடமும் கொடுத்ததோடு, படிக்காத பாமர மக்களிடையே எளிய முறையில் அறியும் படி எடுத்துரைத்து தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார்கள். மேலும் இந்த விழிப்புணர்வு நோட்டீஸ்கள் மற்றும் பிரச்சூரத்தில் நீரின்றி அமையாது உலகு என்ற வள்ளுவர் பெருந்தகையை மீறியும் சாயக்கழிவு கலந்த நீர் ஆற்று நீருடன் கலப்பதையும், நோயாளி, கடனாளி, போராளி இம்மூவரும் பிரச்சினையில் இருந்து மீண்டு வந்தால் தான் இச்சமுதாயம் ஏற்றுக் கொள்ளும். அந்த அளவிற்கு சூழ்நிலையில் விவசாயிகளையும், பொதுமக்களையும் தள்ளியுள்ளதாகவும் அதில் விளக்கமாக எடுத்துக் கூறியுள்ளனர். மேலும் கடைசியாக தேர்தலுக்கு முன்னும் பின்னும் என்றென்றும் உங்கள் நலன் காக்கும் விவசாய அமைப்பு என சொல்லி ஒட்டுக் கேட்கும் அந்த விவசாயிகளின் நூதன பிரச்சாரம் தமிழகத்தில் உள்ள அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. மேலும் இந்த பிரச்சார பயணத்தில் திருப்பூர் சாயக்கழிவு நீரால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த நொய்யல் பாசன விவசாயிகள் நலச்சங்க தலைவரும் ஒருங்கிணைப்பாளருமான நொய்யல் இராமசாமி இதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறார்.

பேட்டி : நொய்யல் மா.இராமசாமி – தலைவர் – நொய்யல் பாசன விவசாயிகள் நலச்சங்கம்

No comments:

Post a Comment