Wednesday 2 December 2015

புலியூர் செட்டிநாடு வித்யாமந்தீர் பள்ளியில் மாநில அளவிலான நீச்சல் போட்டியில் சுமார் 200 க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் ஆர்வத்துடன் பங்கேற்பு


மாநில அளவிலான சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கான நீச்சல் போட்டிகள் கரூர் அருகே உள்ள புலியூர் செட்டிநாடு வித்யா மந்தீர் பள்ளியில் நடைபெற்றது. இந்த நீச்சல் போட்டியில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, கரூர், சேலம் உள்ளிட்ட மாநிலத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 200 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் 14 மற்றும் 16 வயதிற்குட்பட்டோர் Free Style, Back Stroke, Breast Strock, Relay உள்ளிட்ட 4 பிரிவுகளில் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கி கொளரவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளியின்  தாளாளர் வித்யா, ராணி மெட்ரிக் பள்ளி முதல்வர் கொளரி மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.



No comments:

Post a Comment