Tuesday 15 December 2015

ராமநாதபுரம் அருகே இறப்பிலும் இணை பிரியாத தம்பதி


ராமநாதபுரம் அருகே இறப்பிலும் இணைபிரியாத தம்பதியால் உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
ராமநாதபுரம் சிங்காரத் தோப்பைச் சேர்ந்தவர் வேதமுத்து ஆஸ்டின்(88). இவரது மனைவி பிரீடா ஆஸ்டின்(84). மதுரை அமெரிக்கன் கல்லூரியில் உடற் கல்வி இயக்குநராக வேதமுத்து ஆஸ்டின் பணியாற்றினார். அப்போது மதுரை லேடி டோக் கல்லூரியில் உடற்கல்வி இயக்குநராக இருந்த பிரீடா ஆஸ்டினை காதலித்தார். இருவரும் 1956-ல் திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் கனடா சென்று, அங்கு இருவரும் ஒரு கல்லூரியில் உடற்கல்வி இயக்குநர்களாகப் பணியாற்றினர். அங்கு 48 ஆண்டுகள் தங்கியிருந்தனர். ஓய்வுக்குப் பின் அதாவது மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தான் இந்தியா திரும்பி உள்ளனர்.
இவர்களுக்கு குழந்தை இல்லை. அதனால் இருவரும் ராமநாதபுரம் அருகே பிரப்பன்வலசையில் உள்ள தம்பி ஸ்டீபன் ஜெயசீலன் குடும் பத்தினருடன் வந்து தங்கினர். இவர்களை ஸ்டீபன் ஜெயசீலன், அவரது மகன் சைமன், மருமகள் கீதா ஜாஸ்மின் ஆகியோர் பரா மரித்து வந்தனர்.
இருவரும் 80 வயதை கடந்த வர்களாக இருந்தாலும் தினமும் உடற்பயிற்சி, நடை பயிற்சி செய்து வந்துள்ளனர். வீட்டில் தங்க ளுக்காக உடற்பயிற்சி மையமும் வைத்திருந்தனர்.
இந்நிலையில், சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந் த பிரீடா ஆஸ்டின் கடந்த 12-ம் தேதி இரவு 8.30 மணிக்கு இறந்தார். இதனால் வேதமுத்து சோகத்துடன் இருந்தார். பிரீடாவின் சடலம் டிச.14-ம் தேதி அடக்கம் செய்யப்பட இருந்தது.
இந்நிலையில், மனைவி இறந்த சோகத்துடன் இருந்த வேத முத்து கடந்த 13-ம் தேதி இரவு 8.30 மணிக்கு இறந்தார். மனைவி இறந்த அதே நேரத்தில் குறிப்பாக 24 மணி நேரத்தில் கணவரின் உயிரும் பிரிந்ததால் உறவினர்கள் சோகம் அடைந்தனர்.
வாழ்க்கையில் இணைபிரி யாமல் வாழ்ந்த இவர்கள் இறப்பிலும் ஒன்று சேர்ந்தனர். இருவரது சடலமும் ராமநாதபுரம் வடக்கு தெருவில் உள்ள சிஎஸ்ஐ தேவாலய வளாகத்தில் நேற்று மாலை அடக்கம் செய்யப்பட்டது.
வேதமுத்து ஆஸ்டின், ராமநாதபுரம் செய்யது அம்மாள் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் அப்துல்லாவின் நண்பர். இவரது சகோதரர் ஸ்டீபன் ஜெயசீலன், முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல்கலாமின் பள்ளித் தோழர். கலாம் ராமநாதபுரம் வரும்போதெல்லாம், ஸ்டீபன் ஜெயசீலனை சந்தித்துவிட்டுச் செல்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment