Friday 18 December 2015

கரூரில் நடைபெற்ற பிள்ளையார் நோன்பு விழாவில் ஒரு கிலோ உப்பு ரூ 21 ஆயிரத்திற்கு ஏலம்




ஒவ்வொரு ஆண்டும், நாட்டுக் கோட்டை நகரத்தார் சமுதாய மக்களால் உலகெங்கும் கொண்டாடப்படும் பிள்ளையார் நோன்பு விழா கரூர் நகரத்தார்கள் சங்கம் சார்பில் கொண்டாடப்பட்டது. கரூர் ஸ்ரீ பசுபதீஸ்வரர் கோயிலின் முன்பகுதியில் அமைந்துள்ள இராணி சீதை ஆச்சி மஹாலில் நடைபெற்ற பிள்ளையார் நோன்பு விழாவில் கரூர், புலியூர், கரிக்காலி, குளித்தலை, முசிறி, வேலாயுதம்பாளையம், முசிறி, வாங்கல், ஐயர் மலை என மாவட்டம் முழுவதும் இருந்து சுமார் 800 கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
நகரத்தார் சங்க தலைவர் சுப.செந்தில் நாதன் நோன்பு விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றார். மேலும் கல்வி உதவித் தொகையாக 10 மாணவர்களுக்கும், அதிக மதிப்பெண் எடுத்த 8 மாணவ, மாணவிகளுக்கும் பரிசும், உதவித்தொகையும் வழங்கப்பட்டது. விநாயகர் கூட்டு வழிபாடு செய்து சமூக பெரியவர்கள் இழை (எனப்படும், 21 நாட்கள் நோன்பிருந்து ஒவ்வொரு நூல் இலைகளையும் திரித்து அதில் மாவினை கொண்டு) யினை   சுடரேற்றி சமூகத்தின் பெரியவர்கள் வழங்க அனைவரும் மாவினால் கொண்ட நூல் இழை எடுத்துக் கொண்டு உண்டு நோன்பு களைத்தனர்.
பின்னர் இந்நிகழ்ச்சியை தொடர்ந்து மங்கலப் பொருட்கள் ஏலத்தை மேலை.பழநியப்பன் நடத்தினார்., இதில் ஒரு கிலோ உப்பு ரூ 21,000 த்திற்கும், எழுமிச்சம்பழம் ரூ 7 ஆயிரம், தேங்காய் ரூ 5 ஆயிரத்திற்கும், குழந்தை சட்டைகள் ரூ 5 ஆயிரத்திற்கும், நாட்டுச் சக்கரை ரூ 3600 க்கும் விலை போனது. இந்த மங்களப் பொருட்களை ஏலத்தின் மூலம் எடுத்து வீட்டில் வைத்தால் செல்வம், வணிகம், குழந்தைப் பேறு ஆகியவனைகள் நடக்கும் என்பது ஐதீகம் என்பதால் காலம் காலமாக இந்நிகழ்ச்சி நடைபெறுவதாக மேலை.பழநியப்பன் தெரிவித்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் பொருளாளர் கு.ம.குமார், கரு.ரெத்தினம், விஷ்ணு மெய்யப்பன், லெட்சுமணன், மோகன், ஆறுமுகம், கைலாசம், உண்ணா ஆச்சி ஆகியோர் ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.
இதே போல் கரூர் திண்ணப்பா திரையரங்கு அருகில் உள்ள பி.எல்.ஏ ராம். ரெசிடென்ஸியிலும், பி.எல்.பழநியப்பன் – சேதுராமு ஆச்சி ஏற்பாட்டில் பிள்ளையார் நோன்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இங்கும் இதே போல ஏராளமான சமூக மக்கள் கலந்து கொண்டு பிள்ளையார் அருள் பெற்றனர். மேலும் இந்நிகழ்ச்சியில் நடராஜா வள்ளியப்பன், வலம்புரி சோமு, எஸ்.கதிரேஷன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment