Saturday 5 December 2015

கரூரில் சட்டமேதை அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி அகில பாரத இந்து மகா சபா கட்சி சார்பில் மலர் மாலை அணிவித்து அனுசரிப்பு



மறைந்த சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் நினைவு நாள் இன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அகில பாரத இந்து மகா சபா கட்சியினர் சார்பில் கரூர் மாவட்ட தலைவர் காலணி கே.மணி தலைமையில், மாவட்ட செயலாளர் எம்.எஸ்.வினோத் முன்னிலையில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு அவரின் திருவுருவபடத்திற்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாநில துணை செயலாளர் ஜி.சுரேஷ் மற்றும் நிர்வாகிகள் செந்தில் குமார், ரமணன், கார்த்திகேயன், யுவராஜ், நந்தகுமார், கார்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment