Wednesday 2 December 2015

கரூர் அருகே கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷ வாயு தாக்கி இரண்டு தொழிலாளர்கள் பலி – சோகத்தில் கிராம மக்கள்




கரூர் பாலமாள்புரத்தை சேர்ந்த சங்கர் (25) இவர் தென்னக ரயில்வேயில் துப்புறவு பணியாளாரக பணிபுரிந்து வந்தார். இவரது நண்பர் பாலகிருஷ்ணன் (29) கே.எம்.சி காலையை சேர்ந்தவர். இவரும் தென்னக ரயில்வேயில் துப்புறவு பணியாளாரக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் தனியார் கழிவு நீர் சுத்தம் செய்யும் நிறுவனத்தில் இருந்து கரூர் அருகே உள்ள காதப்பாறை என்ற இடத்தில் தனியார் கொசுவலை நிறுவனத்தில் உள்ள கழிவு நீர் தொட்டியில் சுத்தம் செய்யும் பணிக்கு அழைப்பு வந்த நிலையில் சங்கர்,பாலகிருஷ்ணன் இருவரும் சுத்தம் செய்யும் பணிக்காக சென்ற போது சங்கர் என்பவர் முதலில் தொட்டியில் இறங்கிய போது விஷ வாயு தாக்கி உள்ளே தவறி விழுந்துள்ளார்.அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பாலகிருஷ்ணன் அவரை காப்பாற்ற முயற்சிக்கும் போது அவரும் உள்ளே விழுந்துள்ளார்.அதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு தகவல் கொடுத்ததின் பேரில் இருவரையும் இறந்த நிலையில் மீட்டு கரூர் அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வெங்கமேடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கூலித்தொழிலாளிகள் இருவரும் விஷவாயு தாக்கி பலியான சம்பவத்தை தொடர்ந்து அக்கிராம மக்களே சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

No comments:

Post a Comment