Sunday 24 January 2016

இந்தியாவை முன்னேற்றுவோம் உலக சாதனையில் என்ற வார்த்தைக்கிணங்க, கரூரில் குடியரசு தினம், நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் பிறந்த தினத்தையொட்டி தேசிய கொடியை மெடிசன் பந்து மேல் நின்று 12 பேர் 10 நிமிடத்திற்கு மேல் நின்று உலக சாதனை



மாவீரர் நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் பிறந்த தினம், குடியரசு தினம் நாளையொட்டி இந்தியாவை முன்னேற்றுவோம் உலக சாதனை என்ற நிகழ்ச்சி கரூரில் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் டிராகன் ஜெட்லி கலந்து மொண்டும், 12 பேர் மாணவ, மாணவிகள் மெடிசன் பந்து மேல் நின்று 6 அடி நீளம் தேசிய கொடியை 10 நிமிடத்திற்கு மேல் நின்று உலக சாதனை பிடித்தனர். இந்த சாதனை நிகழ்ச்சி லிம்கா, ஜெட்லி, அசிஸ்ட், ஆசியா, இந்தியா ஆகிய சாதனை புத்தகத்தில் இடம் பெற புதிய உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கரூர் திருக்குறள் பேரவை செயலாளர் மேலை.பழநியப்பன் நடுவராக பங்கு கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏந்திய மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தினர்.

No comments:

Post a Comment