Sunday 24 January 2016

கேப்டன் தயவில்லாமல் ஒருவர் கூட தமிழக சட்டசபை தேர்தலில் ஜெயிக்க முடியாது கரூர் மாவட்ட தே.மு.தி.க வில் மாற்று கட்சியினர் இணைப்பு விழாவில் மாவட்ட செயலாளர் தங்கவேலு பேச்சு



கரூர் மாவட்ட தே.மு.தி.க அலுவலகத்தில் மாற்று கட்சியினர் இணையும் விழா தே.மு.தி.க மாவட்ட செயலாளர் தங்கவேலு தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சுமார் நூற்றிற்கும் மேற்பட்டோர் மாற்று கட்சியில் இருந்து தே.மு.தி.க வில் தங்களை இணைத்து கொண்டனர். மேலும் இந்நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட செயலாளர் தங்கவேலு பேசுகையில்., தமிழக சட்டசபையில் தே.மு.தி.க தலைவர் கேப்டனின் தயவில்லாமல் ஒரு கட்சி கூட, ஒரு தொகுதியில் கூட ஜெயிக்க முடியாது என சூளுரை விடுத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் அறிவின்ஸ், மாவட்ட துணை செயலாளர்கள் செல்வக்குமார் மற்றும் குமார், நகர செயலாளர் காந்தி, கேப்டன் மன்றம் சோமூர் ரவி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment