Wednesday 6 January 2016

பேரறிவாளனை விடுவிக்கக் கோரி முதல்வர் தனிப்பிரிவில் அற்புதம்மாள் மனு


ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளனை விடுவிக்கக் கோரி அவரது தாயார் அற்புதம்மாள் முதல்வர் தனிப்பிரிவில் மனு கொடுத்தார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த 1999-ம் ஆண்டு முதல் வேலூர் சிறையில் இருக்கும் பேரறிவாளன், கடந்த சில காலமாக சிறுநீர்ப்பை தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அண்மைகாலமாக உடல்நலக் குறைவு காரணமாக தனது மகனின் மனநிலையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறிய அற்புதம்மாள் தனது மகனை விடுதலை செய்யக் கோரி புதன்கிழமையன்று முதல்வர் தனிப்பிரிவில் மனு தாக்கல் செய்தார்.

No comments:

Post a Comment