Sunday 3 January 2016

அ.தி.மு.க பொறுப்பில் இருந்து நாஞ்சில் சம்பத் நீக்கம் - ம.தி.மு.க இணையதளத்தினர் குஷி



ம.தி.மு.க முக்கிய பொறுப்புகளில் அங்கம் வகித்த நாஞ்சில் சம்பத் பணத்திற்காக அ.தி.மு.க விற்கு தாவியதாக தெரிகிறது. இந்நிலையில் ஏற்கனவே எந்த காரணம் என தெரியாமல் ஆங்காங்கே மூக்கை நுழைத்து வந்த நாஞ்சில் சம்பத் ஐ தனது கட்சி பொறுப்பில் இருந்து அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா விடுவித்துள்ளார். இந்நிலையில் அ.தி.மு.க வினர் ஒரு புறம் இந்த சந்தோஷத்தை கொண்டாடி வரும் நிலையில் ம.தி.மு.க வினர் மற்றும் ம.தி.மு.க இணையதளத்தினர் செம குஷியில் உள்ளனர். புகைப்படம், மற்றும் சூப்பர் டக்கர் வார்த்தைகளை பேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர்களில் ஷேர் செய்து வருகின்றனர்.
எம் தலைவனின் கருப்பு துண்டை தோளில் ஏந்தி தமிழக தெருக்களில் கம்பீரமாக நடை பயின்ற நீ அதிமுகவின் தலைமையால் செல்லாக் காசாக்கப்பட்டாய். அதற்கு என்ன காரணம் உன் மனதில் ஏற்பட்ட அழுக்கு. எம் தலைவன் வைகோவின் உயிராலும், இரத்தத்தாலும் தொண்டர்களால் உருவாக்கிய மதிமுக எங்கிருக்கிறது என்றாயே நீ இப்போது எங்கிருக்கிறாய்.
அடுத்த இடம் உனக்கு தமிழகத்தில் காணாமல் போன தி.மு.க. அரவணைக்க காத்திருக்கிறது, வேட்டியையும் துண்டையும் மாற்றிக் கொள். வருங்காலம் உன்னை ஒருக்காலும் மன்னிக்காது. தலைவர் வைகோ குறித்து தவறியும் இனி ஒரு வார்த்தை பேசினால் உன் நா அழுகி போகும்.நினைவில் கொள். உன் பெயரை உச்சரிக்க விரும்பாத தலைவர் வைகோவின் உண்மைத் தொண்டன் 
என களாய்த்து வருகின்றனர்,

No comments:

Post a Comment