Thursday 21 January 2016

கரூரில் மாவட்ட அ.தி.மு.க கழகம் சார்பில் இன்று மாநில அளவிலான கபடி போட்டி - முதல்வரின் பிறந்த தினத்தையொட்டி மாவட்ட கழகம் ஏற்பாடு


கரூரில் அதிமுக சார்பில் மாநில அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கபடி போட்டிகள் இன்று வியாழக்கிழமை (ஜன. 21) மாலை 6 மணிக்கு தொடங்குகிறது.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி, நடைபெற உள்ள இப்போட்டிக்கு அதிமுக மாவட்டச் செயலாளர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமை வகிக்கிறார். நகரச் செயலாளர் வை. நெடுஞ்செழியன் வரவேற்கிறார்.
போட்டியை மக்களவை துணைத் தலைவர் மு. தம்பிதுரை, அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, தங்கமணி, எம்எல்ஏக்கள் பாப்பாசுந்தரம், வி. செந்தில்பாலாஜி, எஸ். காமராஜ் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.
ஆண்கள் அணியில் முதலிடம் பெறும் அணிக்கு பரிசாக ரூ. 50,000 மற்றும் கோப்பை, 2-ம் இடம் பெறும் அணிக்கு ரூ. 40,000, 3-ம் இடம்பிடிக்கும் அணிக்கு ரூ. 30,000, நான்காம் இடம்பிடிக்கும் அணிக்கு ரூ. 20,000 வழங்கப்படுகிறது.
பெண்களுக்கான போட்டியில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு ரூ. 15,000, இரண்டாம் இடம்பிடிக்கும் அணிக்கு ரூ. 10,000, மூன்றாம்
இடம்பிடிக்கும் அணிக்கு ரூ. 7,000, 4-ம் இடம்பிடிக்கும் அணிக்கு ரூ. 5,000 வழங்கப்பட உள்ளது.
இதற்கான முழு ஏற்பாடுகளை கரூர் மாவட்ட அ.தி.மு.க கழகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்

No comments:

Post a Comment