Thursday 28 January 2016

அண்ணன் சொல்ற சேதி கொஞ்சம் கேளுங்க ! எனது பிறந்த நாளை கொண்டாட விரும்பவில்லை: மு.க.அழகிரி தகவல்


எனது பிறந்த நாளை நான் எங்கும் கொண்டாட விரும்பவில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் ஜன. 30-ம் தேதி தனது பிறந்த நாளை, மதுரை ராஜாமுத்தையா மன்றத்தில் மு.க. அழகிரி ஆதரவாளர்களுடன் சிறப்பாகக் கொண்டாடுவார். ஆனால், இந்த ஆண்டு அவரது பிறந்த நாள் குறித்து எவ்வித ஏற்பாடும், தகவலும் இல்லாதது அவரது ஆதரவாளர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மு.க. அழகிரி வெளியிட்ட அறிக்கை:
என் மீது அன்பும், பாசமும், கொண்ட நண்பர்களுக்கும், ஆதரவா ளர்களுக்கும், தம்பிமார் களுக்கும் வேண்டுகோள். தமிழகம் முழுவதும் இருந்து, இந்த ஆண்டு எனது பிறந்தநாள் மதுரையிலா, சென்னையிலா என்று விசாரித்த வண்ணம் உள்ளீர்கள்.
மேலும், ஊடகங்களும் எனது பிறந்தநாள் குறித்து பல்வேறு செய்திகளை வெளியிடுகின்றன. இந்த ஆண்டு, சமீபத்தில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தால் ஏராளமான தமிழர்கள் பாதிக்கப்பட்டனர். அந்த பாதிப்பில் இருந்து இன்னும் மீளாத துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இந்த நிலையில், இந்த ஆண்டு ஜன. 30-ம் தேதி எனது பிறந்தநாளை எங்கும் கொண்டாட விரும்பவில்லை. ஆனால், அதே நேரத்தில் என் நண்பர்களும், ஆதரவாளர்களும், தமிழகம் முழுவதும் தொடர்ந்து எனது பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். உங்களின் வாழ்த்துகளை உள்ளன்போடு ஏற்றுக்கொள்கிறேன் என்றார்.

No comments:

Post a Comment