Sunday 31 January 2016

விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு திட்டம்: மன் கி பாத் உரையில் பிரதமர் மோடி தகவல்



பிரதமர் மோடியின் மன் கி பாத் உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு;- 

*நமது சுதந்திரத்துக்கும் கதர் ஆடைகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு

*ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 30 ஆம் தேதி நாட்டுக்காக உயிர் நீத்தவர்களுக்கு இந்தியவர்கள் அனைவரும் 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்த வேண்டும்

*ஓவ்வொரு இந்தியனும் காதி உடைகள் பயன்படுத்த வேண்டும் என்பது காந்தியின் ஆசையாக இருந்தது.

*காதி உடைகள் தற்போது இளைஞர்களையும் கவருவதாக உள்ளது.

*காதி பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்க சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

*தீவிரவாத அச்சுறுத்தலையும் தாண்டி சமீபத்தில் குடியரசு தினத்தை நாம் சிறப்பாக கொண்டாடி முடித்துள்ளோம் , 

*அரியானா மாநிலம் முன்னேற்றம் அடைந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. 

*அங்கு கொண்டு வரப்பட்டுள்ள பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பெண்கல்வி முக்கியத்துவம் பாராட்டத்தக்கது .

மத்திய அரசு கொண்டு வந்துள்ள பயிர்க்காப்பீட்டு திட்டம் விவசாயிகளுக்கான வரப்பிரசாதம் ஆகும் . 

*இந்த திட்டத்தில் வரும் இரண்டு ஆண்டுகளில் 50 சதவீத விவசாயிகள் மத்திய அரசின் பயிர்கள் காப்பீடு திட்டத்தின் கீழ் கொண்டு வர முயற்சி மேற்கொண்டுள்ளோம் .

*விவசாயிகளுக்கு பயிர்க்காப்பிட்டால் நிவாரணம் கிடைக்கும். 

*மேன் கி பாத் நிகழ்ச்சியை அவரவர் மொழியில் கேட்க வழி வகை செய்யப்படும் . 

*மொபைல் போன் மூலமும் இந்த பேச்சு கேட்க வழி வகை செய்யப்படும் 

*சமீபத்திய ஸடார்ட் அப் இந்தியா திட்டம் மூலம் பலர் பயன் பெறும் நிலை உருவாக்கியுள்ளோம்

* அடுத்த மாதம் உங்களை நான் மன் கி பாத் நிகழ்ச்சியின் மூலம் சந்திக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment