Saturday 23 January 2016

எனக்குப் பின்னாலும், அ.தி.மு.க. மக்களுக்காகவே இயங்கும் ஜெயலலிதா உருக்கமான பேச்சு - கவர்னர் உரைக்கு நன்றி தெரிவித்த போது.,, !!!


சட்டசபையில் இன்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்திற்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:-

சிலர் கேட்கலாம் குறிப்பில் லாமல் பேச முடியாதா என்று. பேச முடியும், மணிக் கணக்கில் பேச முடியும். பொதுக் கூட்டங்களில் பேசுவதுபோல் முழங்க முடியும். செந்தமிழில் முழங்க முடியும். ஆனால், இத்தனை புள்ளிவிவரங்களை நினைவில் வைத்துக் கொண்டு சொல்ல முடியுமா?

ஒவ்வொரு துறையை எடுத்துக் கொண்டாலும் 36 துறைகள் இருக்கின்றன அராசங்கத்தில் ஒவ்வொரு துறையை எடுத்துக் கொண்டாலும் நாங்கள் செய்திருக்கின்ற சாதனை களைச் சொல்ல வேண்டு மானால் ஒரு துறைக்கு ஒரு நாள் தேவை. ஒரு நாள் முழுவதும் தேவை. அப்படியானால், இந்த ஐந்து ஆண்டு காலத்தில் நாங்கள் செய்துள்ள சாதனைகள் முழுவதையும் சொல்லி முடிக்க வேண்டுமென்றால் 36 நாட்கள் நான் பதிலுரை இங்கே வழங்க வேண்டும். 36 நாட்கள் இந்த அவை கூட வேண்டும். 36 நாட்களும் சொல்லக்கூடிய அளவுக்கு அத்தனை சாதனைகளைப் புரிந்துள்ளோம்.

அவற்றையெல்லாம் சுருக்கி, கிட்டத்தட்ட ஒற்றரைமணி நேரத்தில் சொல்லக்கூடிய அளவுக்கு கொண்டுவருவது என்பது பகீரதப்பிரயத்தனம். எதைச் சொல்வது, எதை விடுவது என்று பார்த்துப் பார்த்து தயாரிக்கப்பட்ட பதிலுரை இது. ஆகவே, இன்னும் நாங்கள் செய்துள்ள சாதனைகளைச் சொல்ல வேண்டும் என்றால், ஏராளமானவை உள்ளன.

ஆனால் நான் குறிப்பிட்ட விரும்புவது எனன் வென் றால், எங்களுடைய  செயல் பாடு, எங்களுடைய திட்டங் கள் எல்லாமே மக்களுக் காகத்தான். எங்களைப் பொறுத்தவரை எந்தச் சுய நலமும் இல்லை. பொது நலம்தான். மக்கள் நலம்தான். அ.தி.மு.க.தான் உண்மையான மக்கள் இயக்கம்.   மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட இயக்கம். மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்த தலைவியைக் கொண்ட ஒரு இயக்கம். இந்த இயக்கம் இருக்கின்ற வரை, நான் இருக்கின்ற வரை, இந்த இயக்கம் மென்மேலும், மென்மேலும் தமிழர்கள் வாழ்வு வளம் பெறச் செயல் படும். எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற் றாண்டுகள் வந்தாலும், அ.தி.மு.க. மக்களுக்காகவே இயங்கும்.
இவ்வாறு முதல்-அமைச்சர் பேசினார்.

No comments:

Post a Comment