Thursday 28 January 2016

தமிழகத்தில் சென்னை, கோவை பொலிவுறு நகரங்களாகின்றன: மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு அறிவிப்பு


பொலிவுறு நகரங்கள் குறித்து வெங்கய்ய நாயுடு இன்று அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத் தலைநகர் சென்னை மற்றும் கோவை நகரங்கள் பொலிவுறு நகரங்களாக உருவாகப் போவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
புது தில்லியில் இன்று செய்தியாளர்கள் முன்னிலையில், மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு பொலிவுறு நகரங்கள் குறித்த அறிவிப்பினை வெளியிட்டார்.
அப்போது அவர் கூறியதாவது, பொலிவுறு நகரங்களாகும் முதல் 20 நகரங்களில் 5 மாநிலங்களின் தலைநகரங்களும் உண்டு. 20 நகரங்களில் 3.5 கோடி பேர் உள்ளனர். இந்த பொலிவுறு நகரங்களில் 1.52 குடிமக்களின் பங்களிப்பு உள்ளது.
தமிழகத்தில் சென்னை மற்றும் கோவை பொலிவுறு நகரங்களாகின்றன என்று அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment