Sunday 31 January 2016

தமிழகத்தில் தேர்தல் கூட்டணியை பாஜக தலைமை முடிவெடுக்கும்: பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தகவல்



தமிழக தேர்தல் கூட்டணி குறித்து பாஜக தேசிய தலைமை முடிவெடுக்கும் என்று தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
கோவையில் புதிதாக கட்டப்பட்டுள்ள இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி மருத்துவமனை திறப்பு விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடி, பிப்ரவரி 2-ம் தேதி வருகிறார். அன்றைய தினம் கொடிசியா திடலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். பொதுக்கூட்டம் அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ஹெச்.ராஜா, செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள இருக்கும் இந்த பொதுக்கூட்டம், தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின் தொடக்கமாக இருக்கும். மோடியின் டிஜிட்டல்மயம் திட்டத்தால் மத்திய அரசுத் துறைகள் முழுவதும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதால் மத்தியில் ஊழல் இல்லா அட்சி நடைபெறுகிறது.
இதேபோல், தமிழகத்திலும் ஊழல் இல்லா ஆட்சி வேண்டும். அதற்கு, பாஜக தலைமையிலான ஆட்சி தமிழகத்தில் அமைய வேண்டும். தமிழக தேர்தலைப் பொறுத்தவரை முதல்வர் வேட்பாளர் குறித்து முன்கூட்டியே அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. தேர்தல் கூட்டணி குறித்து கட்சியின் தேசிய தலைமை இறுதி முடிவும் எடுக்கும்.
சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்புகள் எல்லாம் தேர்தலின்போது தகர்த்தெறியப்படும். தமிழகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் கூடுதல் கவனம் செலுத்துவதற்காக மூத்த அமைச்சர்கள் 10 பேர் வர உள்ளனர் என்றார்.

No comments:

Post a Comment