Friday 15 January 2016

திருவள்ளுவர் படத்திற்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி – குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்குதல் நிகழ்ச்சி – பங்கேற்க – கரூர் திருக்குறள் பேரவை செயலாளர் மேலை.பழநியப்பன் அழைப்பு


உலகப் பொதுமறையாம் திருக்குறளை இயற்றிய ஐயன் திருவள்ளுவர் நாள் விழா உலகம் முழுவதும் (16-01-16) அன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் கரூர் சீனிவாச புரத்தில் உள்ள திருக்குறள் பேரவை அலுவலகத்தில் ஐயன் திருவள்ளுவரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து அவரின் புகழை பாடுவதோடு, அங்கேயே குழந்தைகளுக்கு பரிசுப்பொருட்களும், இனிப்புகளும் வழங்கப்பட உள்ளதாக அப்பேரவையின் செயலாளர் மேலை.பழநியப்பன் தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்கும் படி கரூர் திருக்குறள் பேரவை செயலாளர் மேலை.பழநியப்பன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment