Thursday 21 January 2016

தமிழகம் உள்பட 5 மாநில தேர்தல் குறித்து டெல்லியில் தேர்தல் கமிஷன் ஆலோசனை


தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களுக்கு விரைவில் சட்டசபை தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்காக மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன், தலைமை தேர்தல் கமிஷனர் டெல்லியில் இன்று முக்கிய ஆலோசனை நடத்தி உள்ளார். இதனால் விரைவில் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த கூட்டத்தில் தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கலந்து கொண்டார்.

இது குறித்து ஏ.என்.ஐ சேனலுக்கு பேட்டி அளித்த தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியதாவது:-

இன்றைய கூட்டத்தில் தமிழக தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தபட வில்லை.தேர்தல்  ஏற்பாடுகள் குறித்துதான் பேசபட்டது. தேர்தல் தேதி குறித்து தேர்தல் ஆணையம் முடிவு செய்து அறிவிக்கும்.என கூறினார்.

No comments:

Post a Comment