Wednesday 6 January 2016

தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க. தகவல் தொழில் நுட்ப பிரிவு மாவட்ட ஆலோசனை கூட்டங்கள் ஜெயலலிதா அறிவிப்பு


அ.திமு.க. பொதுச் செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க.  தகவல் தொழில் நுட்பப் பிரிவு மாவட்ட ஆலோசனைக் கூட்டங்கள் வருகிற 9-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்பப் பிரிவின் சார்பில் நடைபெறுகிறது.

இதில், எனது தலைமை யிலான அ.தி.மு.க. அரசின் தொலை நோக்கு திட்டங்கள்,  சமூக வலைதளங்களை கழக வளர்ச்சிக்கும்,  தேர்தலுக்கும் பயன்படுத்துவதற்கான வழிமுறைகள், தகவல் தொழில்நுட்பப் பிரிவின் செயல்பாடுகள் மற்றும் தேர்தல் யுக்திகள் உள்ளிட்ட பணிகளை முனைப்புடன் மேற்கொள்வது சம்பந்தமாக, 9.1.2016 முதல் 26.1.2016 வரை “கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்ட ஆலோசனைக் கூட்டங்கள்” கீழே குறிப்பிடப்பட்டுள்ள அட்ட வணையில் உள்ளவாறு நடைபெறும்.  

9.1.2016-ந்தேதி (சனிக் கிழமை) காலை 10 மணிக்கு கோயம்பேட்டில் திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு, காஞ்சிபுரம் கிழக்கு, காஞ்சிபுரம் மத்தியம், காஞ்சிபுரம் மேற்கு.
11.1.2016-ந்தேதி (திங்கட் கிழமை) காலை 10 மணிக்கு வேலூரில்-வேலூர் கிழக்கு, வேலூர் மேற்கு, திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு, தருமபுரி, கிருஷ்ணகிரி.

12.1.2016-ந்தேதி  (செவ் வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு விழுப்புரத்தில்- விழுப்புரம் வடக்கு, விழுப் புரம் தெற்கு, கடலூர் கிழக்கு, கடலூர் மேற்கு.
18.1.2016-ந்தேதி  (திங்கட் கிழமை) காலை 10 மணிக்கு தஞ்சாவூரில்- தஞ்சாவூர் வடக்கு, தஞ்சாவூர் தெற்கு, நாகப்பட்டினம், திருவாரூர்.

19.1.2016-ந்தேதி (செவ் வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு திருச்சியில்- திருச்சி மாநகர், திருச்சி புறநகர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை.
21.1.2016-ந்தேதி (வியாழக் கிழமை) காலை 10 மணிக்கு கோவையில்- கோவை மாநகர், கோவை புறநகர், நீலகிரி, திருப்பூர் மாநகர், திருப்பூர் புறநகர்.
சேலம்
21-ந்தேதி மாலை 4 மணிக்கு சேலத்தில்- சேலம் மாநகர், சேலம் புறநகர், நாமக்கல், ஈரோடு மாநகர், ஈரோடு புறநகர், கரூர்.
23.1.2016-ந்தேதி  (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு மதுரையில்- மதுரை மாநகர், மதுரை புறநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம்.

23-ந்தேதி மாலை 4 மணிக்கு திருநெல்வேலியில்- திருநெல்வேலி மாநகர், திருநெல்வேலி புறநகர், விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி.
26.1.2016-ந்தேதி (செவ் வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு சென்னையில் - வட சென்னை வடக்கு, வட சென்னை தெற்கு, தென் சென்னை வடக்கு, தென் சென்னை தெற்கு.
இந்த ஆலோசனைக் கூட் டங்கள், கழக தகவல் தொழில் நுட்பப் பிரிவுச் செயலாளர் அஸ்பயர்  சுவாமிநாதன் தலைமையிலும், கழக தகவல் தொழில் நுட்பப் பிரிவு  மாநில நிர்வாகிகள் முன்னிலை யிலும் நடைபெறும்.

ஆலோசனைக் கூட்டங் களில் சம்பந்தப்பட்ட மாவட்டங் களைச் சேர்ந்த நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும்; கழகம், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை ஆகியவற்றைச் சேர்ந்த நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டும்.  
சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள், இந்த ஆலோசனைக் கூட்டங்களை நடத்துவதற்கான ஏற்பாடு களைச் செய்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கி றேன்.
இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறி உள்ளார்.

No comments:

Post a Comment