Tuesday 26 January 2016

தேர்தல் “நிதி”, குடும்ப ”நிதி” என நிதி மூலம் சொத்து சேர்த்த மைனாரிட்டி கருணாநிதி ! அவரின் பெயரிலும், அவரது குடும்பத்தினரின் பெயரில் கூடவே நிதி உள்ளது – அ.தி.மு.க மாவட்ட செயலாளர் விஜயபாஸ்கர் பேச்சால் கருணா ”நிதி” என்ற பெயருக்கும் சிக்கல்


தேர்தல் “நிதி”, குடும்ப ”நிதி” என நிதி மூலம் சொத்து சேர்த்த மைனாரிட்டி கருணாநிதி ! அவரின் பெயரிலும், அவரது குடும்பத்தினரின் பெயரில் கூடவே நிதி உள்ளது – அ.தி.மு.க மாவட்ட செயலாளர் விஜயபாஸ்கர் பேச்சால் கருணா ”நிதி” என்ற பெயருக்கும் சர்ச்சை
மைனாரிட்டி தி.மு.க என மூச்சுக்கு முன்னூறு முறை சாடும் கரூர்  மாவட்ட அ.தி.மு.க செயலாளர் விஜயபாஸ்கர்
செம்மொழி மாநாட்டை நடத்தி கொள்ளை, கொள்ளையாக கொள்ளையடித்தது தான் மைனாரிட்டி தி.மு.க வின் சாதனை ! ஆனால் எங்கள் அம்மாவோ தமிழ் மொழியை உண்மையாகவே மிளிர செய்தவர் !
தமிழகத்தின் மைய பகுதியான கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளராக தற்போது பொறுப்பேற்று இருக்கும் விஜயபாஸ்கர் தற்போது அரசியல் களப்பணிகளில் தீவிர ஈடுபாடு காட்டி வருகிறார். ஆங்காங்கே பொதுக்கூட்டம், தெருமுனை கூட்டம் என்றால் போதும், தி.மு.க வினர் காதை மூடிக்கொள்ள வேண்டும், அந்த அளவிற்கு தலைமைக்கழக பேச்சாளரை விட மைனாரிட்டி, மைனாரிட்டி என தி.மு.க கட்சியை அவர் படுத்தும் பாடு அப்பாடா ? என்ற அளவிற்கு தான் சொல்ல வேண்டும் இப்படி இருக்க, கரூர் லைட் ஹவுஸ் கார்ணர் குமரன் ரோட்டில் அ.தி.மு.க மாவட்ட மாணவரணி சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தில் பேசிய அ.தி.மு.க மாவட்ட செயலாளர் விஜயபாஸ்கர், கடந்த மைனாரிட்டி தி.மு.க ஆட்சியில் தமிழ் மொழியை வியாபாரமாக்கி மைனாரிட்டி தலைவரின் குடும்ப அரசியலுக்கு பயன்படுத்திக் கொண்டார். ஆனால் எங்களது தமிழக முதல்வர் அம்மாவோ ! அனைத்து அரசு அலுவலகங்களில் தமிழ் வாழ்க என ஒளியால் மிளிர செய்து, மைனாரிட்டியால் இருண்டு கிடந்த தமிழை செழிக்க வைத்தவர். தமிழ் மொழி மூலம் குடும்பத்திற்காக சொத்து சேர்த்த மைனாரிட்டி தலைவர் கருணா நிதி எங்கே ? சொத்திற்காக குடும்பத்தையே கழகமாக எண்ணி நினைத்து இன்றும் அவர்கள் மூலம் சொத்து சேர்த்து வைத்துள்ளவர் மைனாரிட்டி தலைவர் ? ஆனால் எங்கள் அம்மாவோ கழக கண்மணிகளையே சொத்தாக எண்ணி பார்த்து கழகத்தையே குடும்பமாக நினைத்து வாழ்பவர். இப்படி இருக்க சொத்து சேர்க்கும் மைனாரிட்டி ஆட்சியால் சேர்த்த சொத்துக்கள் ஏராளம், பேஸ்புக், வாட்ஸ் அப், டுவிட்டர் என எல்லாவற்றிலும் குடும்ப சொத்துக்களை அவர்களது கட்சியினரே வெளியிட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் நிதி, குடும்ப நிதி என நிதிகளை சொத்தாக சேர்க்கும் மைனாரிட்டி தலைவர் பெயரில் கூட நிதியை சேர்த்து உள்ளார் என புதிய சர்ச்சையை ஏற்படுத்தினார். ஆமாம், அது என்ன ? மைனாரிட்டி தலைவர் கருணா ”நிதி”, மேலும் அவர்களது குடும்பத்தார் கலா ”நிதி”, தயா ”நிதி”, பின்னர் மைனாரிட்டி தலைவரின் பேரன் உதய “நிதி” என பெயரிலும் நிதியை சேர்த்தவர் தான் கடந்த மைனாரிட்டி ஆட்சியின் சாதனை, தற்போதும் குடும்ப அளவில் அவர்களது சாதனை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இலவசங்களை பள்ளி மாணவ, மாணவிகள் மட்டுமில்லாமல் பொதுமக்களிடையே புகுத்தியவர் தான் மைனாரிட்டி தலைவர், ஆனால் அதையே அம்மா அவர்கள் அந்த இலவசங்களை தவிர்க்கும் பொருட்டு விலையில்லா பொருட்களாக மாற்றினார். கடந்த ஆட்சியில் மின் அதாவது கரண்ட் என்பது கேள்விக்குறியாகி இருந்தது. அப்போது இருந்த அரசு எங்கே தற்போது மாண்புமிகு அம்மா அவர்கள் தமிழகத்தை மின் மிகை மாநிலமாக்கிய எங்கள் அம்மா மூலம் உள்ள அரசு எங்கே சிந்தித்து பாருங்கள் பொது மக்களே !
மேலும் மாண்புமிகு அம்மா அவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர்  தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கவர்னரின் பேருரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு பதிலளித்தார். அப்போது அதில்., அம்மா அவர்கள் எனது முந்தைய ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட பெண்களுக்கான சுகாதார வளாகங்கள் முந்தைய மைனாரிட்டி தி.மு.. அரசால் பராமரிப்பு இல்லாமல் விடப்பட்டிருந்தன. தற்போது அவை 170 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டு, பயன்பாட்டில் உள்ளன. மேலும் ஆண்களுக்கான சுகாதார வளாகங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
முந்தைய தி.மு.. ஆட்சியில் நஷ்டத்தில் இருந்த கோ-ஆப்டெக்ஸ் போன்ற அரசு நிறுவனங்கள் சீரமைக்கப்பட்டு லாபத்தில் இயங்கி வருகின்றன.
முந்தைய மைனாரிட்டி திமுக அரசு மக்கள் நலனில் எவ்வித அக்கறையும் கொள்ளாமல், தங்கள் சொந்த நலனை கருத்தில் கொண்டே செயல்பட்டனர். மக்கள் நலன் என்ற போர்வையில் குடும்ப நலனையே அவர்கள் வளர்த்தனர். இதற்கு மிகச் சிறந்த உதாரணம் இலவச வண்ண தொலைக்காட்சி திட்டம். ஆனால் எனது தலைமையிலான அண்ணா தி.மு.. அரசைப் பொறுத்தவரை எங்களது திட்டங்கள் அனைத்தும், தமிழக மக்கள் நலனுக்காகத் தான். தமிழர் வாழ்வும், தமிழர் வளமும் என்றென்றும் மங்காது புதுப் பொலிவுடன் திகழும் வண்ணம் நாங்கள் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றினோம் என தெரிவித்தார். மேலும்
கடந்த 2011–ம் ஆண்டு தமிழக மக்கள் ஒரு மாற்றம் வேண்டுமென உறுதியுடன் இருந்தார்கள். சட்டம்-ஒழுங்கு சீர் செய்யப்பட வேண்டும்; இல்லாதோரின் நிலை உயர வேண்டும்; இருண்ட தமிழகம் ஒளி பெற வேண்டும்; விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்கள், ஒடுக்கப்பட்டோர், ஒதுக்கப்பட்டோர், ஏழை, எளியோர் ஆகிய அனைவர் வாழ்விலும் வசந்தம் வீசிட வேண்டும் என்று, இந்த மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். அவ்வாறு மாற்றம் ஏற்படுத்திய மக்களின் எதிர்பார்ப்புகளை நாங்கள் நிறைவேற்றி உள்ளோம். தமிழக மக்களின் வாழ்வு ஏற்றம் பெறச் செய்துள்ளோம். இதைத் தான் எனது பதிலுரையில் நான் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளேன். எனவே தான்தொடரட்டும் இந்த அரசுஎன்று மக்கள் தற்போது நினைக்கிறார்கள். மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்பதை அடிக்கடி சொல்லி வருகிறேன். அதைப் போலவே மக்களால் எனது தலைமையிலான அரசு, மக்களுக்காகவே எனது தலைமையிலான அரசு என்பதையும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். மக்களால் இந்த அரசு, மக்களுக்காகவே இந்த அரசு.
சாதனைகள் ஏராளம் சிலர் கேட்கலாம் குறிப்பில்லாமல் பேச முடியாதா என்று. பேச முடியும், மணிக்கணக்கில் பேச முடியும். பொதுக் கூட்டங்களில் பேசுவதுபோல் முழங்க முடியும். செந்தமிழில் முழங்க முடியும். ஆனால், இத்தனை புள்ளிவிவரங்களை நினைவில் வைத்துக்கொண்டு சொல்ல முடியுமா? ஒவ்வொரு துறையை எடுத்துக்கொண்டாலும் 36 துறைகள் இருக்கின்றன அரசாங்கத்தில் ஒவ்வொரு துறையை எடுத்துக்கொண்டாலும் நாங்கள் செய்திருக்கின்ற சாதனைகளைச் சொல்லவேண்டுமானால் ஒரு துறைக்கு ஒரு நாள் தேவை. ஒரு நாள் முழுவதும் தேவை. அப்படியானால், இந்த ஐந்து ஆண்டு காலத்தில் நாங்கள் செய்துள்ள சாதனைகள் முழுவதையும் சொல்லி முடிக்க வேண்டுமென்றால் 36 நாட்கள் நான் பதிலுரை இங்கே வழங்கவேண்டும். 36 நாட்கள் இந்த அவை கூடவேண்டும். 36 நாட்களும் சொல்லக்கூடிய அளவுக்கு அத்தனை சாதனைகளைப் புரிந்துள்ளோம். அவற்றையெல்லாம் சுருக்கி, கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரத்தில் சொல்லக்கூடிய அளவுக்கு கொண்டுவருவது என்பது பகீரதப் பிரயத்தனம். எதைச் சொல்வது, எதை விடுவது என்று பார்த்துப் பார்த்து தயாரிக்கப்பட்ட பதிலுரை இது. ஆகவே, இன்னும் நாங்கள் செய்துள்ள சாதனைகளைச் சொல்லவேண்டும் என்றால், ஏராளமானவை உள்ளனமக்களுக்காக உழைப்போம் என சூளுரைத்தார். அம்மா அவர்கள் மேலும் தெரிவித்த போது.,  நான் குறிப்பிட விரும்புவது என்னவென்றால், எங்களுடைய செயல்பாடு, எங்களுடைய திட்டங்கள் எல்லாமே மக்களுக்காகத்தான். எங்களைப் பொறுத்தவரை எந்தச் சுய நலமும் இல்லை. பொது நலம் தான், மக்கள் நலம்தான். அண்ணா தி.மு.. தான் உண்மையான மக்கள் இயக்கம். மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட இயக்கம். மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்த தலைவியைக் கொண்ட ஒரு இயக்கம். இந்த இயக்கம் இருக்கின்ற வரை, நான் இருக்கின்ற வரை, இந்த இயக்கம் மென்மேலும், மென்மேலும் தமிழர்கள் வாழ்வு வளம் பெறச் செயல்படும். எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும், அண்ணா தி.மு.. மக்களுக்காகவே இயங்கும். என்ற அம்மா அவர்கள் தங்களுடைய பேச்சில் ., என்னுடைய இந்தப் பதிலுரை உறுப்பினர்களுக்கு திருப்தி அளித்திருக்கும் என நான் நம்புகிறேன். எனது இந்தப் பதிலுரையை ஏற்றுக் கொண்டு கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது கொடுத்த திருத்தங்களை உறுப்பினர்கள்  திரும்பப்  பெற  வேண்டும் என்று கேட்டுக் கொள்வதோடு,  தீர்மானத்தை  ஒருமனதாக நிறைவேற்றித் தருமாறு சபாநாயகர் வாயிலாக இந்த மாமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் கேட்டுக் கொண்டு அமைகிறேன் என்று கூறிய காவிய தலைவியை நாடு மட்டும் இல்லாமல் உலகில் உள்ள அனைத்து தமிழர்களும் அறிவார்கள், அப்படி பட்ட எங்கள்  அம்மா ! எங்கே, வெறும் அறிக்கை விட்டு மட்டுமே ஊடகங்களுக்கு பூச்சாண்டி காட்டும் மைனாரிட்டி தலைவர் எங்கே ? என்றார். மேலும் கருத்து கணிப்பு என்று எடுத்து கொள்கின்றனர். அந்த கருத்துக்கணிப்பில் அவர்களது குடும்பத்தில் அங்கம் வகிக்கும் தி.மு.க குடும்ப அங்கத்தினர்களிடையே கருத்து கணிப்பை எடுக்காமல் பொதுமக்களிடமும் கருத்து கணிப்பு நடத்தினால் நூற்றுக்கு நூறு சதவிகிதம் எங்கள் புரட்சித்தலைவி அம்மா வின் சாதனை அடங்கிய எங்களது நாடு போற்றும் நான்காண்டு சாதனை போதும் என்றார். பொன்னாடை போற்ற வேண்டுமென்றால் ரூ 10 ஆயிரம் என்ற மைனாரிட்டி எங்கே, மக்களையே பொன்னான வாழ்க்கையில் அமர வைத்த எங்கள் அம்மா எங்கே என்றார்

இதில் ஒரே இடத்தில் மட்டும் தான் கருணாநிதியின் பெயரை அதுவும் பெயரில் நிதி உள்ளதை சுட்டி காட்டி, தி.மு.க தலைவரின் பெயரை கரூர் மாவட்ட செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார். பொதுக்கூட்டத்திற்கு முன்பு தொடங்கி பொதுக்கூட்டம் இறுதி வரை மூச்சுக்கு முன்னூறு தடவை அம்மா ! அம்மா ! என்று தான் எந்த கூட்டமாக இருந்தாலும் முடிக்கிறார். அந்த அளவுக்கு தி.மு.க கட்சியையும், அதை சார்ந்த தலைவர் கருணாநிதியையும், மைனாரிட்டி கட்சி, மைனாரிட்டி தலைவர் என்று கூறி வருவதால் இவருடைய பேச்சை அ.தி.மு.க வினர் மத்தியில் மட்டுமில்லாமல் தி.மு.க வால் பாதிக்கப்பட்ட அனைவரையும் கவர்ந்துள்ளது. மேலும் இந்த பொதுக்கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், கரூர் மாவட்ட பொருளாளர் எம்.எஸ்.கண்ணதாசன், கரூர் மாவட்ட ஜெ பேரவை செயலாளரும், கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ வுமான எஸ்.காமராஜ், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் சாகுல் அமீது, கு.வடிவேலு, கரூர் மாவட்ட இளைஞரணி செயலாளர் வி.சி.கே.ஜெயராஜ், கரூர் நகர செயலாளர் வை.நெடுஞ்செழியன், மாவட்ட துணை செயலாளர் சசிகலா ரவி, ஆயில் இரமேஷ், சேரன் பழனிச்சாமி, சரவணா ஸ்டோர்ஸ் சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment