Thursday 21 January 2016

ஜல்லிகட்டு தடை விவகாரம் முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பார் ஓ.பன்னீர்செல்வம் உறுதி


சட்டசபையில் காங்கிரஸ் உறுப்பினர் விஜயதாரணி ஜல்லிக்கட்டு பற்றி பேசும் போது,  குறுக்கிட்டு அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறிய தாவது:-

ஜல்லிக்கட்டு பற்றி பேசுவதற்கு காங்கிரஸ், தி.மு.க.வுக்கு எந்த அருகதையும் கிடையாது. காங்கிரஸ் தலைமையில் இருந்த மத்திய அரசுதான் காளைகளை  காட்சி பட்டியலில்  சேர்த்தது. எனவே அவர் இதுபற்றி பேச விஜயதாரணிக்கு  தார்மீக உரிமை இல்லை.

அனைத்து உறுப்பினர் களுக்கும் பதில் என்ன வென்றால் முதல்-அமைச்சர் அம்மா இதில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க உள்ளார்.  ஜல்லிக்கட்டு நடத்த என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை அனைவரும் அறிவார்கள். எனவே தொடர்ந்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க இந்த அரசு உறுதி கொள்ளும். இந்த பிரச்சினை உச்சநீதிமன்றத்தில் உள்ளது. ஆகவே இந்த பிரச்சினையை முதல்-அமைச்சர் அம்மா சட்டப்பூர்வமாக அணுகுவார்.

இவ்வாறு ஓ.பன்னீர் செல்வம்  கூறினார்.

No comments:

Post a Comment