Thursday 9 July 2015

நாமக்கல் அருகே திருச்செங்கோடு பகுதியில் தே.மு.தி.க எம்.எல்.ஏ கலக்கல் ஒரே நாளில் ரூ 30 லட்சம் மதிப்பீட்டில் பூமி பூஜைகளை தொடக்கி வைத்து அசத்தல்

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஒன்றியத்தை சார்ந்த மொளசி, பட்லூர் மற்றும் விட்டம் பாளையம் பஞ்சாயத்துக்களில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 30 லட்சம் மதிப்பிலான கட்டிடம் திறப்பு விழா மற்றும் பூமி பூஜையில் கலந்து கொண்டு திருச்செங்கோடு எம்.எல்.ஏ சம்பத்குமார் ஒரு கலக்கு கலக்கியுள்ளார்.
இவர் திறந்து வைத்த கட்டிடங்கள் ஏழை எளிய மாணவர்கள் இலவச கல்வி பயிலும் வகையில் அவர்களுக்கு சமையலறையுடன் கூடிய உணவு அருந்தும் இடத்தை ரூ 7 லட்சம் மதிப்பிலும், ரூ 8 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணறும், 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல் நிலை நீர்தேக்கத் தொட்டி ஆகியவற்றின் கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜை பணிகளையும் திருச்செங்கோடு தே.மு.தி.க எம்.எல்.ஏ சம்பத்குமார் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். இதே போல பட்லூர், விட்டம்பாளையம் பகுதியிலும் எம்.எல்.ஏ தொகுதியில் கட்டப்பட்ட உணவருந்தும் கட்டுமான பணிகளையும் எம்.எல்.ஏ சம்பத்குமார் திறந்து வைத்தார். மேலும் தே.மு.தி.க ஒன்றிய செயலாளர் செங்கோட்டையன், நகர செயலாளர் தம்பி மனோகரன், ஒன்றியக் குழு உறுப்பினர் முத்துமணி, பஞ்சாயத்து தலைவர்கள் வெள்ளி மணி, செல்மணி, சத்யமூர்த்தி, தலைமை ஆசிரியர்கள் முத்துச்சாமி, மலர்விழி ரேணுகா தேவி, ஆண்டிப்பாளையம் சுரேஷ் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர். எது எப்படியோ ஒரே நாளில் புதிய கட்டிடங்களையும், புதிய பூமி பூஜைகளும் போட்டு எம்.எல்.ஏ சம்பத்குமார் ஒரு கலக்கு கலக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
-    
 எமது செய்தியாளர்

-    ஜெய்குமார்

No comments:

Post a Comment