Sunday 19 July 2015

வாட்ஸ் அப்பில் தீயாய் பரவும் குரங்கு (மாருதி) வீடியோ செய்தி

வாட்ஸ் அப்பில் தீயாய் பரவும் குரங்கு (மாருதி) வீடியோ செய்தி

வைத்தீஸ்வரன்கோயில், பத்திரகாளியம்மன் சன்னதி முன்பு, நான்கு நாட்களாக உணவருந்தாமல் கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க அமர்ந்துள்ள குரங்கால் பரபரப்பு:-
நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த வைதீஸ்வரன்கோயிலில் வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளது.இக்கோவில் நவகிரகங்களில் செவ்வாய் ஸ்தலமாக விளங்கிவருகிறது. கோவிலின் வடக்கு பிரகாரத்தில் பத்ரகாளியம்மன் தனி சன்னதி உள்ளது. இந்நிலையில் நேற்று மதியம் முதல் ஒரு குரங்கு அம்மனை வழிபட்டபடியே அமர்ந்திருந்தது,இதனை கண்ட பக்தர்கள் குரங்குக்கு பழம்,பால் மற்றும் உணவுகள் வைத்தனர்.ஆனால் எதையும் உட்கொள்ளாத குரங்கு கருவறை அருகே அமர்ந்து அழுதுகொண்டே அம்மனை பார்த்தபடியே உள்ளது. அருகில் செல்லும் பக்கதர்களை எதுவும் செய்யாமல் சுவற்றில் சாய்ந்த நிலையிலேயே அமர்ந்துள்ளது.இரண்டு நாட்களாக குரங்கு உணவருந்தாமல் கருவறை அருகே அமர்ந்து வணங்குவது பக்தர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.குரங்கை காண பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இப்பகுதியில் இந்த சம்பவத்தை ஆன்மீக பக்தர்கள் ஒரு சிலர் இந்த காட்சியை வாட்ஸ் அப்பில் அனுப்புவதால், தமிழகம் மட்டுமில்லாமல், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் இந்துக்கள் மட்டுமில்லாமல், மற்ற இரக்க குணம் கொண்டவர்களிடமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment