Monday 20 July 2015

அரசு கலைக்கல்லூரி லியோ புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா

கரூர் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்கத்தின் துணை இளம் அரிமா அமைப்பான லியோ சங்கத்தின் அரசுக்கலைக் கல்லூரி 2015 – 16 புதிய நிர்வாகிகளாக தலைவர் வி.மோகன், செயலாளர் ஏ.மணிகண்டன், பொருளாளார் பி.ஜெய்கணேஷ் உள்ளிட்ட குழுவினருக்கு கல்லூரி ஆடிட்டோரியத்தில் லியோ தலைவர் செ.ஜெயராமன் பதவியேற்பு செய்து வைத்தார். கல்லூரி முதல்வர் டாக்டர் ஆர்.பாரி, மண்டல தலைவர் சூர்யா வே.கதிரவன், வட்டாரத்தலைவர் கே.மனோகரன், மாவட்ட அமைச்சரவை ஆலோசகர் மேலை.பழநியப்பன், மாவட்டத் தலைவர் எஸ்.கே.டி.எம்.கருப்பசாமி, கரூர் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்க செயலாளர் பி.கார்த்திகேயன், பொருளாளர் குமார ராஜா, மாவட்டத்தலைவர் விநாயகம், லியோ கவுன்சில் உறுப்பினர்கள் வினோத், ஜவஹர், சண்முக நாதன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள். லியோ மாணவ, மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கல்லூரியின் லியோர் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் டி.செல்வக்குமார் நன்றி கூறினார். லியோ எம்.கார்த்திகேயன், சி.பாலமுருகன், ஏ.அங்குராஜ் விழாவிற்கான முழு ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். மேலும் இந்நிகழ்ச்சியில் எல்லோருக்கும் தெரிந்தது தான் எனக்கூறிய லியோ மாவட்டத்தலைவர் செய்வீர்களா ! செய்வீர்களா என நான் கேட்டுக் கொள்வது கல்லூரியை சுத்தமாக இருக்க செய்வீர்களா என கேட்டுக் கொண்டார். பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா என்ற திட்டத்தின் கீழ் நூதனமாக ஜெ பாணியில் சொல்லி மாணவ, மாணவிகளை உற்சாகப்படுத்தினார்

No comments:

Post a Comment