Tuesday 7 July 2015

திண்டுக்கல் புறவழிச்சாலையில் சிமெண்ட் ஏற்றி வந்த லாரி தீ விபத்து லாரி முழுவதும் எரிந்து சேதம்.

அரியலூரில் இருந்து உத்தமபாளையத்திற்க்கு சிமெண்ட் ஏற்றி சென்ற லாரி திண்டுக்கல் – திருச்சி புறவழிச்சாலை E.B காலனி என்ற இடத்தில் தடுப்பு சுவரில் லாரி மோதியதில் லாரியின் முன்பக்க டயர்கள் கழன்று விழுந்தது இதனையடுத்து லாரி தீ  பிடித்தது  உடனே சம்பவ இடத்திற்க்கு  இரண்டு தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்புதுறை வீரர்கள்  ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். லாரியில் இருந்த ரூ 1.30 ஆயிரம் மதிப்பிலான சிமெண்ட் மூடைகள் மற்றும் ரூ 11 இலட்சம் மதிப்பிலான லாரி முழுவதும் எரிந்து சேதமாயின. இந்த தீ விபத்தால் புறவழிச்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யபட்டு இருந்தது. இந்த விபத்து குறித்து லாரி டிரைவர் சீனிவாசனிடம் தாடிகொம்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

No comments:

Post a Comment