Thursday 16 July 2015

அரசியல் கட்சியை விட நடிகர் சங்கத்தேர்தல் சூடுபிடிக்கிறது – கலை கட்டுவதோடு மிரட்டும் படலம் - நடிகர் சங்க தேர்தலில் தங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என நடிகர் விஷால் மிரட்டியதாக நாமக்கல் நாடக நடிகர் சங்க தலைவர் நாமக்கல் மாவட்ட எஸ்.பியிடம் புகார்.

நாமக்கல் மாவட்ட நாடக நடிகர் சங்க தலைவராகவும், தென்னிந்திய நடிகர் சங்க பொறுப்பிலும் இருப்பவர் நாமக்கல்லைச் சேர்ந்த ஆட்டோ ராஜா.  இவர் தனது வழக்கறிஞர் அய்யாவு உடன் நாமக்கல் எஸ்.பி அலுவகத்திற்கு வந்து ஒரு புகார் மனுவை கொடுத்தார்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நேற்று முன்தினம் தனது வீட்டிற்கு ஒரு நான்கு சக்கர வாகனத்தில் வந்த கும்பல், வரும் நாட்களில் நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் விஷால் குழுவைச் சேர்ந்தவர்கள் நாமக்கலில் பிரச்சாரத்திற்கு வர உள்ளனர்.  அவர்களுக்கே நீங்கள் ஒட்டு போட வேண்டும் இல்லாவிட்டால் உங்களை கடத்திச் சென்று விடுவோம் என மிரட்டினார்கள்.  இதையடுத்து நான் எனது வழக்கறிஞர் அய்யாவு உடன் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார்மனு வழங்க வந்தேன்.  மேலும் தேர்தல் முடியும் வரை எனக்கு பாதுகாப்பு தரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருப்பதாக தெரிவித்தார்.  அப்போது அவருடன் நாடக நடிகர் சங்கத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் இருந்தனர். அரசியல் கட்சியை விட நடிகர் சங்கத்தேர்தல் தற்போது சூடுபிடித்துள்ளதோடு, அத்தேர்தல் கலை கட்டுவதோடு மிரட்டும் படலமும் தொடர்ந்துள்ளது- நடிகர் சங்க தேர்தலில் தங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என நடிகர் விஷால்  மிரட்டியதாக  நாமக்கல் நாடக நடிகர் சங்க தலைவர் நாமக்கல் மாவட்ட எஸ்.பியிடம் புகார் நடிகர், நடிகைகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




No comments:

Post a Comment