Friday 17 July 2015

கான்வெண்டில் சாதனை படைத்த கரூவூர் மாணவிக்கு பாராட்டு !

நடந்து முடிந்த பிளஸ் டூ எனப்படும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் நீலகிரி மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவி பிஎல். அஞ்சனா அழகம்மை கரூர் மாணவி ஆவார். இவர் 1200 க்கு 1179 மதிப்பெண் பெற்றுள்ளார். மேலும் இவர் குன்னூர் ஜெய்ண்ட் ஜோசப் கான்வெண்டில் படித்தார். பெற்றோர் சி.பழனியப்பன், லயன்ஸ் சுந்தரி, தேவகோட்டை திண்ணப்பா குடும்பம், டி.சொக்கலிங்கம் செட்டியார், அழகம்மை ஆச்சியின் மகன் வழிப் பேத்தியும், அழகப்பா செட்டியார், லெட்சுமி ஆச்சியின் மகள் வழிப்பேத்தியும் ஆவார். சிறந்த மதிப்பெண் பெற்ற பிஎல்.அஞ்சனா அழகம்மைக்கு பள்ளியின் நிர்வாகம், கரூவூர் திருக்குறள் பேரவை செயலாளர் மேலை.பழநியப்பன், கரூர் நகரத்தார் சங்கத்தலைவர் அக்ரி சுப.செந்தில்நாதன், கே.வி.பி. டைரக்டர் ராஜசேகரன், மனித நேய கருத்துவர் கஸ்தூரி மோகன் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

புகைப்படம் செய்தி

நீலகிரி மாவட்டம், குன்னூர் ஜெய்ண்ட் ஜோசப் கான்வெண்டில் படித்த கரூவூர் மாணவி பிஎல்.அஞ்சனா அழகம்மைக்கு கரூவூர் திருக்குறள் பேரவை சார்பில் வாழ்த்து தெரிவித்த போது எடுத்த படம்

No comments:

Post a Comment