Thursday 16 July 2015

கரூர் அருகே புன்னம் சத்திரம் அன்னை மகளிர் கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு முகாம் – ஏராளமான மாணவிகள் பங்கேற்று பயன்பெற்றனர்

கரூர் மாவட்டம்,  புன்னம்சத்திரத்தில்  இயங்கிக்  கொண்டிருக்கும்  அன்னை மகளிர்  கல்லூரியில்  (கலை &  அறிவியல்) “ பகடிவதை  மற்றும்  திராவக வீச்சினால்  பாதிப்படையும்  நபர்களுக்கு  உரிய  நிவாரணம்”; பற்றிய  சட்ட விழிப்புணர்வு  முகாம்  நடைபெற்றது.   கல்லூரியின்  முதல்வர் முனைவர் சந்திரகலா  வரவேற்புரை  வழங்கினார்.  விழாவினை  சிறப்பிக்கும் பொருட்டு முதன்மை மாவட்ட நீதிபதி  ஹேமலதா  தலைமை  வகித்தார்.  இவ்விழாவில்  தலைவர்  டாக்டர். இராமமூர்த்தி,  செயலாளர்  டாக்டர் முத்துக்குமார்,  நிறுவனத்  தலைவர்  திரு..ஆர்.மலையப்பசாமி,  தாளாளர்  கந்தசாமி  அறக்கட்டளை உறுப்பினர் தங்கராஜ் ஆகியோர்  வாழ்த்துரை  வழங்கினார்கள். வழக்கறிஞர் பாலக்குமார்,  குளோபல்  சமூக  நல  பாதுகாப்பு  இயக்க  தலைவர்  சொக்கலிங்கம், கூடுதல்  மாவட்ட  உரிமையியல்  நீதிபதி  முனிராஜா,  முதன்மை  சார்பு  நீதிபதி  செயலாளர் மணி  ஆகியோர்  பகடிவதை பற்றி  சிறப்புரை யாற்றினார்கள்.  இவ்விழாவில்  பேராசிரியைகள்  மற்றும் மாணவியர்கள்  கலந்து  கொண்டு  நிகழ்ச்சிகளை  சிறப்பித்தனர்.  குளோபல் சமூக  நல  பாதுகாப்பு  இயக்க  பொருளாளர் தீபம் சங்கர்  நன்றியுரை வழங்கினார்.  விழா இனிதே நிறைவடைந்தது. மேலும் இந்த விழாவில் ஏராளமான மாணவிகள் பங்கேற்று பயன்பெற்றனர்.

No comments:

Post a Comment