Saturday 18 July 2015

முறையான அழைப்பு இல்லாததால் நடிகர் விஷால் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியை நாமக்கல் மாவட்ட நாடக நடிகர் சங்கம் புறக்கணிக்கும் என அதன் தலைவர் நாமக்கல்லில் தெரிவித்தார்.

தென்னிந்திய நடிகர்கள் சங்க தேர்தல் சம்பந்தமாக வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.  இரு அணியினரும் தமிழகம் முழுவதும் உள்ள தங்களது ஆதரவாளர்களிடம் அதரவு திரட்டி வருகிறாகள். இந்த நிலையில் நாளை நாமக்கல்லிற்கு நடிகர் விஷால் தனது ரசிகர்களை சந்திக்க வருகிறார். இவர் மேலும் நாடக நடிகர்களை சந்திக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது. – நாமக்கல் மாவட்ட நாடக நடிகர் சங்கத்தில் நூற்றி ஐம்பதுக்கும் மேற்ப்பட்ட உறுப்பினர்களைக்கொண்டு செயல்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை சங்கத்தில் இருப்பவர்களுக்கு இதுவரை அழைப்பு வரவில்லை. இந்நிலையில் நாமக்கல் மாவட்ட நாடக நடிகர் தலைவர் ஆட்டோராஜா செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது நடிகர் விஷால் நாளை  நாமக்கல் வர உள்ளதாக அறிந்ததாகவும் ஆனால் இதுவரை எவ்விவிதமான  அழைப்பும் நாமக்கல் மாவட்ட நடிகர் சங்கத்துக்கு வரவில்லை. இதனால் நடிகர் விஷால் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியை நாமக்கல் நாடக நடிகர் சங்கம் புறக்கணிக்க போவதாகவும் மேலும் நாமக்கல் நாடக நடிகர் சங்கத்தை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டால் விஷால் மீது சட்டப்படி வழக்கு தொடரப்போவதாகவும் தெரிவித்தார். 


 

No comments:

Post a Comment