Tuesday 14 July 2015

எம்.குமாரசாமி கல்வியியல் கல்லூரி ஆசிரியர் பல்கலைகழகத் தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம்

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தால் அண்மையில் நடத்தப்பட்ட B.Ed  தேர்வில் கரூர் எம்.குமாரசாமி கல்வியியல் கல்லூரி,  மாணவி P.சரண்யா மாவட்ட அளவில் முதலிடம் (1051/1200 மதிப்பெண்கள்) பெற்று  சாதனை புரிந்துள்ளார், மேலும்  இக்கல்லூரியில் கருத்தியல் தேர்வில் தனிச்சிறப்புடன் கூடிய முதல் வகுப்பில் 33  பேரும், கருத்தியல் தேர்வு மற்றும் செய்முறை தேர்வில் தனிச்சிறப்புடன் கூடிய முதல் வகுப்பில் 90 பேரும்,  1000 மதிப்பெண்களுக்கு மேல்   17 பேரும் பெற்றுள்ளனர். தொடர்ந்து   5 ஆண்டுகளாக மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் முதலிடம் பெற்றுள்ளது    குறிப்பிடத்தக்கது.    முதல்  மதிப்பெண்  பெற்ற   மாணவி P.சரண்யாவை பரணிபார்க் கல்வி குழுமத்தின் தாளாளர் திரு S.மோகனரங்கன், செயலர் திருமதி பத்மாவதி மோகனரங்கன் , முதன்மை முதல்வர் முனைவர் C. ராமசுப்ரமணியன், எம் குமாரசாமி கல்வியியல் கல்லூரியின் முதல்வர்  P.சாந்தி, பேராசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் வாழ்த்தினர்.   ஆசிரியர் தகுதித் தேர்வில் முழுமையான மதிப்பெண்கள் பெற அனைவரும் தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment