Monday 27 July 2015

தீபாவளி போல் கொண்டாடிய அ.தி.மு.க வினர் – கரூரில் உற்சாகம்

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் பதவியை பறித்ததோடு, மாவட்டச் செயலாளர் பதவியையும் பறித்ததால் அ.தி.மு.க வின் அம்மாவின் உண்மை விசுவாசிகள் உற்சாகம் கரூர் மாவட்டத்தில் பட்டாசு வெடித்து – இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி மீது அக்கட்சி அதிரடி நடவடிக்கை எடுத்து அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதோடு, மாவட்ட செயலாளர் பதவியையும் பறித்தது. இதனை மற்ற கட்சிகள் தான் கொண்டாடுவது வழக்கம். ஆனால் கரூர் மாவட்டத்தில் உள்ள கட்சி நிர்வாகிகள் மற்றும் மூத்த நிர்வாகிகள் என அ.தி.மு.க பிற அணிகளை சார்ந்த யாரையும் மதிக்காமல் இருந்ததோடு நீண்ட நாட்களாக கொடுமை போல் அணிபவித்து வந்தவர்கள் கட்சி பதவியிலிருந்து செந்தில் பாலாஜி நீக்கப்பட்டதோடு, அமைச்சர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டதை வரவேற்கும் பொருட்டு, கரூர், பசுபதிபாளையம், வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி அ.தி.மு.க வினர் கொண்டாடினார்கள். மேலும் அம்மா எடுத்த இந்த முடிவு சரியானதே, அம்மாவிற்கு அடிப்படை தொண்டன் படும் கஷ்டம் கூட தெரியும் என்பதை இது மூலம் மற்ற கட்சிகள் தெரிந்து கொள்ளலாம் அம்மா எடுத்த இந்த முடிவை என்றும் நாங்கள் வரவேற்போம் என கொண்டாடியதால் மற்ற கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேட்டி : கே.மணி – பேரூர் கழக செயலாளர் – அ.இ.அ.தி.மு.க


No comments:

Post a Comment