Monday 6 July 2015

கரூர் மார்னிங் ஸ்டார் பள்ளி மாணவி சாதனை

கரூர் மார்னிங் ஸ்டார் பள்ளி மாணவி சாதனை
திண்டுக்கல் எஸ்.எம்.பி மெட்ரிக்குலேசன் பள்ளியில் தமிழக அரசின் கலைப்பண்பாட்டுத் துறை மூலம் நடத்தப்பட்ட மாநில அளவிலான திறன் போட்டிகளில் கரூர் மார்னிங் ஸ்டார் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் வை. சபிதா, வி. விஷாலிப்பிரியா, உமாமகேஷ்வர் ஆகியோர் நடனம் ஓவியம் ஆகிய போட்டிகளில் பங்கேற்றனர்.
அவர்களில் பள்ளியின் ஏழாம் வகுப்பு மாணவி வை. சபிதா நாட்டுப்புற நடனப்போட்டியில் மாநில அளவில் இரண்டாமிடம் பெற்று பள்ளிக்கும் கரூர் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.  
மாணவர்களை பள்ளியின் செயலர் அருண் கருப்பசாமி, கூடுதல் செயலர் ஜி.பி.ஆர்.சிவசங்கர், தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியை ஆர்.கஸ்தூரி மற்றும் ஆசிரிய பெருமக்கள் என அனைவரும் பாராட்டினர்


No comments:

Post a Comment