Wednesday 29 July 2015

கரூர் அருகே 65 வயது மூதாட்டியை கெடுத்த 35 வயது வாலிபர் கைது – ஜே.சி.பி டிரைவரின் போதையால் வந்த கொடூரம்

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தொகுதிக்குட்பட்ட வெள்ளியணை பகுதியை சார்ந்தவர் விஸ்வநாதன் (வயது 30), இவர் இப்பகுதியில் ஜே.சி.பி டிரைவராக உள்ளார். இந்நிலையில் அம்மையப்பகவுண்டபுதூர் சின்னவீடு (முறையற்ற மனைவி) இவருக்கு உள்ளதாக தெரிகிறது. இந்த பகுதியில் நேற்று அளவுக்கு அதிகமான மது போதையில் அவருடைய சின்னவீட்டிற்கு செல்வதற்கு பதில் அருகில் வீட்டில் காற்றாட வெளியில் தூங்கிக் கொண்டிருந்த சுமார் 65 வயது (பெயர் மறைக்கப்பட்டுள்ளது) மூதாட்டியின் மீது பாய்ந்துள்ளார். இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் இன்று அதிகாலை  சுமார் 2.30 மணியளவில் பாட்டியின் சத்தத்தையடுத்து, ஒன்று கூடி முதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை அடித்து உதைத்து வெள்ளியணை போலீசில் ஒப்படைத்துள்ளனர். இச்சம்பவம் இந்திய அளவில் குற்றப்பிரிவில் பெரும் அதிர்ச்சியையும், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment