Wednesday 30 September 2015

அரியலூர் அருகே சாமி கும்பிடுவதில் தகராறு 144 தடை உத்தரவு, இருதரப்பிலும் முன்னெச்சரிக்கையாக 156 பேர் கைது


அரியலூர்: அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ள சிலம்பூர் கிராமத்தில் மீண்டும் பதட்டத்தை உருவாக்கும் விதமாக அவ்வூரில் உள்ள ஐயனார் கோவிலில் வழிபாடு செய்திவதில் இரு சமூக மக்களிடையே பிரச்சனை எழுந்தது. இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் இன்று 9 மணிக்கு கோவிலில் நுழையபோவதாக, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அறிவித்ததை தொடர்ந்து இரு சமூகத்தினற்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதனால் உடையார்பாளையம் கோட்டாட்சியர் ராஜகோபாலன் இன்று முதல் 15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். பதட்டம் காரணமாக கிராமத்தை சுற்றி 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கோட்டாட்சியர் மற்றும் அறநிலையத்துறையினர் கோவிலுக்கு சென்று ஒரு சமூகத்தினரின் பூட்டை உடைத்துவிட்டு வேறு பூட்டை போட்டு சீல் வைத்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரு தரப்பிலும் சுமார் 156 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment