Wednesday 30 September 2015

நடிகர் சங்க தேர்தல்: ரஜினியிடம் ஆதரவு திரட்டிய சரத்குமார் அணியினர்


நடிகர் சங்க தேர்தல் தற்போது சூடு பிடித்துள்ளது. இந்த தேர்தலில் சரத்குமார் தலைமையிலான ஒரு அணியும், விஷால் தலைமையிலான ஒரு அணியும் போட்டியிடுகிறது. 

சரத்குமார் அணியில் தலைவர் பதவிக்கு சரத்குமாரும், பொதுச் செயலாளர் பதவிக்கு ராதாரவியும் போட்டியிடுகின்றனர். மேலும், சிம்பு, விஜயகுமார் ஆகியோரும் போட்டியிடுகின்றனர். விஷால் அணியில் தலைவர் பதவிக்கு நாசரும், பொதுச் செயலாளர் பதவிக்கு விஷாலும் போட்டியிடுகின்றனர். நடிகர்கள் கார்த்தி, பொன் வண்ணன், கருணாஸ் ஆகியோரும் போட்டியிடுகின்றனர். 

இரு அணியினரும் தங்கள் அணிக்கு ஆதரவு திரட்டும் வகையில் பல முன்னணி நட்சத்திரங்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு விஷால் அணியினர் நடிகர்கள் ரஜினி, கமல், விஜய் ஆகியோரை நேரில் சந்தித்து தங்களது அணிக்கு ஆதரவு திரட்டினர். 

இந்நிலையில் தற்போது, சரத்குமார் அணியினர் தங்களது அணிக்கு ஆதரவு கேட்டு ரஜினிகாந்தை இன்று நேரில் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது, சரத்குமார், ராதாரவி, விஜயகுமார், தியாகு, பாத்திமா பாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டு, தங்களது அணிக்கு ஆதரவு கேட்டனர். 

நடிகர் சங்க தேர்தல் வரும் அக்டோபர் 18-ந் தேதி நடக்கவிருக்கிறது. இதற்கான நாளை வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது.

No comments:

Post a Comment