Sunday 27 September 2015

காவிரிப் பிரச்சினை: 29 ஆம் தேதி போராட்டத்திற்கு ம.தி.மு.க. ஆதரவு வைகோ அறிக்கை


தமிழகம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகச் சட்டப்படி அனுபவித்து வருகின்ற காவிரி நீர் உரிமையை அடியோடு பறித்துக் கொள்ளும் விதத்தில் கர்நாடக அரசு அண்மைக் காலமாக அநீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
நடுவர் மன்றத் தீர்ப்பை உதறி எறிந்து விட்டு தமிழகத்திற்குத் தண்ணீர் விடாமலும் காவிரிக்குக் குறுக்கே புதிதாக அணைகளைக் கட்டும் ஏற்பாடுகளைச் செய்தும் மேற்கொண்டுள்ள அக்கிரமச் செயலைத் தடுக்க வேண்டிய மத்திய அரசு மறைமுகமாக கர்நாடகத்திற்கு உதவி செய்கிறது.
தற்போது காவிரி டெல்டா மாவட்டங்களில் கருகும் நெற்பயிரைக் காப்பாற்ற தண்ணீரைப் பெற்றுத் தர மத்திய -மாநில அரசுகளை வலியுறுத்தி மார்க்சிÞட் கம்யூனிÞட் - இந்திய கம்யூனிÞட் கட்சி சார்பு விவசாய சங்கங்கள் 2015 செப்டெம்பர் 29 ஆம் தேதியன்று தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கடை அடைப்பு, சாலை மறியல், இரயில் மறியல் போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன.
இன்றையச் சூழலுக்குத் தேவையான இப்போராட்டத்தை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வரவேற்கிறது; கழகத் தோழர்கள் பங்கேற்கும் விதத்தில் மாவட்டச் செயலாளர்கள் கழக நிர்வாகிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

No comments:

Post a Comment