Friday 25 September 2015

தங்கம் விலை அதிரடி உயர்வு: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.336 அதிகரிப்பு - ஜவுளிக்கடைகளில் விற்பனை மந்தம்


சென்னையில் கடந்த 22–ந்தேதி தங்கம் விலை பவுன் ரூ. 19 ஆயிரத்து 936 ஆக இருந்தது. மறுநாள் 23–ந்தேதி பவுனுக்கு ரூ. 96 குறைந்து. ரூ.19 ஆயிரத்து 840 ஆக விற்றது. நேற்று பவுனுக்கு ரூ. 168 உயர்ந்து ரூ. 20 ஆயிரத்து 8 ஆனது. இதன் மூலம் கடந்த 16 நாட்களுக்கு பிறகு தங்கம் விலை மீண்டும் 20 ஆயிரத்தை எட்டியது.
இன்று ஒரே நாளில் மீண்டும் அதிரடியாக ரூ. 336 உயர்ந்துள்ளது. ஒரு பவுன் ரூ 20 ஆயிரத்து 344 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ. 42 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ. 2,543–க்கு விற்கிறது.
அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளது. அதுவே தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. மேலும் தங்கம் மீதான முதலீடு அதிகரித்ததும் விலை உயர காரணம் என்றும் கூறப்படுகிறது.
தங்கத்தை போன்று வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ. 35 ஆயிரத்து 990 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ. 38.50–க்கு விற்கிறது

No comments:

Post a Comment