Wednesday 30 September 2015

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது: இலவச தரிசனத்துக்கு 14 மணிநேரம் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம்



திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று  பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இலவச தரிசனத்துக்கு 14 மணிநேரம் ஆனது.

புரட்டாசி மாத சனிக்கிழமையில் விரதம் இருந்து, மஞ்சள் ஆடை உடுத்தி, பாத யாத்திரையாக சென்று, சனிக்கிழமை அன்று திருப்பதி ஏழுமலையானை தரிசித்து யாத்திரையை முடித்துக் கொள்ளும் வழக்கம் பஸ்கள் இல்லாத அந்தக் காலத்திலேயே இருந்ததாக கூறப்படுகிறது.

தற்போது சகல வசதிகளும் உள்ள இந்த நாட்களிலும் பாத யாத்திரை தொடர்வது தான் ஏழுமலையானின் மகிமைக்குச் சான்றாக விளங்குகிறது. இதனால், புரட்டாசி மாத சனிக்கிழமையில் பக்தர்களின் வருகை அதிகமாக உள்ளது. 3–ந்தேதி புரட்டாசி 3–வது சனிக்கிழமை என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையான் கோவிலுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அன்று விரதம் இருந்து வழிபடும் பக்தர்களுக்கு பல நலன்களையும், வளங்களையும் வாரி வழங்குகிறார் திருப்பதி ஏழுமலையான்.

இந்தநிலையில் புரட்டாசி மாதத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு ஆகிய இரு மலைப்பாதைகளில் மொத்தம் 18 ஆயிரம் பக்தர்கள் பாதயாத்திரையாக நடந்து வந்தனர். அன்று ஒரேநாளில் மொத்தம் 81 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

No comments:

Post a Comment